புதன், 31 ஜூலை, 2013

மனதால்கூட தீமை செய்யாதிருப்பது சிறந்தது.



குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். 
அதிகாரம்: இன்னாசெய்யாமை.
குறள்   316 -  320  



இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்.        குறள் # 316
துன்பமானவை எனத்தான் உணர்ந்தவற்றை பிறருக்குச்
செய்வதைத் தவிர்க்க வேண்டும்.            பாமரன் பொருள்.

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.            குறள் # 317
எவ்வளவிலும், எப்பொழுதும், எவருக்கும் மனதால்கூட
தீமை செய்யாதிருப்பது சிறந்தது.     பாமரன் பொருள்

தன்னுயிர்க்கு ஏன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்.      குறள் # 318
தனக்கு துன்பமானவை என்பதை உணர்ந்தவன் என்ன காரணத்தால்
மற்ற உயிர்களுக்கு அத்துன்பத்தைச் செய்வது.     பாமரன் பொருள்

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்.         குறள் # 319
பிறருக்கு காலையில் தீமையைச் செய்தால் தமக்கு தீமை
மாலையில் தாமாக வந்துசேரும்.       பாமரன் பொருள்

நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்

நோயின்மை வேண்டு பவர்.        குறள் # 320
தீமையெல்லாம் தீமைசெய்தவரையே சேரும். (எனவே)பிறர்க்கு தீமைசெய்யார்

துன்பமில்லாது வாழ விரும்புபவர்.     பாமரன் பொருள்

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இன்றைக்கு மிகவும் தேவையான "அதிகாரம்"...

Unknown சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் said...
//இன்றைக்கு மிகவும் தேவையான "அதிகாரம்"//


Thank you for your visit to my blog and for posting a valuable comment.

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.