பொருட்பால், அரசியல்.
அதிகாரம்; குற்றங்கடிதல்
குறள் 436 முதல் 440 வரை
தன்குற்றம் நீக்கிப்
பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும்
இறைக்கு. குறள் # 436
தனதுகுற்றத்தை நீக்கி பிறரது
குற்றத்தைக் காணமுற்பட்டால்
என்ன குற்றம் நேரும்
தலைவனுக்கு. பாமரன் குறள்
செயற்பால செய்யா திவறியான்
செல்வம்
உயற்பால தன்றிக் கெடும். குறள் # 437
செய்ய வேண்டியவற்றை செய்யாத
கருமியின் செல்வம்
பயன் ஏதுமின்றி
வீணாகும். பாமரன் பொருள்.
பற்றுள்ளம் என்னும் இவறன்மை
எற்றுள்ளும்
எண்ணப்படுவதொன் றன்று. குறள்
# 438.
கருமித்தனத்தால் கொடுக்காத
த்ன்மை எல்லாகுற்றங்களுள்ளும்
ஒன்றாக எண்ணப்படக்கூடியதல்ல.
(மிக மோசமானது). பாமரன் பொருள்.
.
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை. குறள் # 439
எப்பொழுதும் தன்னைத்தான்
வியந்துபேசாதீர், விரும்பாதீர்
நன்மைதராத செயல் செய்வதை. பாமரன் பொருள்.
காதல காதல் அறியாமை
உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார்
நூல். குறள் # 440
விரும்பியவற்றை
பிறர் அறியாமல் நிறைவேற்றினால்
பலிக்காது பகைவரின்
சூழ்ச்சிகள். பாமரன் பொருள்.