திங்கள், 24 பிப்ரவரி, 2014

உரிய காலத்தை அறிந்து செய்தால் அரிய செயல் என்பது உண்டோ?

பொருட்பால்    
அரசியல்  
அதிகாரம்; காலமறிதல்.  
குறள் 481 முதல் 490 வரை.
பகல் வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.       குறள் 481
பகலில் வலிமைமிக்க கோட்டானை காக்கை வெல்லும். பகைவரை வெல்ல
தலைவருக்கு ஏற்ற காலம் வேண்டும்.           பாமரன் குறள்.

வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

வருவாய் குறைவாக இருந்தாலும் தீங்கு இல்லை

                                                             பொருட்பால்
        அரசியல்
அதிகாரம்; வலியறிதல்
குறள் 471 முதல் 480 வரை



வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்    குறள் # 471
செயலின்வலிமையும் தனதுவலிமையும் பகைவரின் வலிமையும்இருவரது
துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செய்க.      பாமரன் பொருள்

ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்கு செல்லாதது இல்     குறள் # 472.
தம்மால் முடியும்செயல் அறிந்து அதைச்செய்வதற்கான வழியை சிந்தித்து
முயல்பவருக்கு முடியாதது ஏதுமில்லை                    jqபாமரன் பொருள்

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.    குறள் # 473
தன்னுடைய ஆற்றலை அறியாமல் ஆர்வத்தினால் தொடங்கி
இடையில் முடிக்க முடியாது கெட்டவர் பலர்.      பாமரன் பொருள்

அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.   குறள் # 474
மற்றவர்களோடு ஒத்துப்போகாமல் தன்வலிமையையும் அறியாமல் தன்னைப்
பெரிதாக எண்ணுபவன் விரைவில் கெடுவான்.       பாமரன் பொருள்

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின் குறள் # 475
மயில்தோகையேயானாலும் வண்டியின் அச்சு முறியும் அதனை
அளவிற்கு அதிகமாக வண்டியில் ஏற்றினால்.               பாமரன் பொருள்

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்     குறள் # 476 
மரத்தின் கிளைநுனியில் ஏறியவர் அதையும்தாண்டி செல்லமுயன்றால்
அம்முயற்சி அவர் உயிருக்கு முடிவாகி விடும்        பாமரன் பொருள்

ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி.     குறள் # 477
வருவாயின் அளவையறிந்து தருக, அதுவே பொருளைக்
காத்துக்கொண்டு தரும் வழியாகும்.           பாமரன் பொருள்

ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை.       குறள் #478
வருவாய் குறைவாக இருந்தாலும் தீங்கு இல்லை
செலவு அதிகமாகாமல் இருந்தால்.           பாமரன் பொருள்

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.
பொருளின் அளவறிந்து வாழாதவனின் வாழ்க்கை வளமானதாகத் தோன்றி
இல்லாமல் அழிந்து விடும்                           பாமரன் பொருள்

உளவரை தூக்காத ஒப்புர வாண்மை 
வளவரை வல்லைக் கெடும்   குறள் # 480
பொருள் உள்ள அளவை ஆராயாது செய்யும் உதவிகளால்

செல்வத்தின் அளவு விரைவில் குறையும்.            பாமரன் பொருள்    

சனி, 1 பிப்ரவரி, 2014

செய்யவேண்டியவை செய்யாததாலும் கெட்டுப் போவான்.


பொருட்பால்
அரசியல்
அதிகாரம்; தெரிந்து செயல்வகை
குறள் 461 முதல் 470 வரை

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்நு செயல்       குறள் # 461
செலவையும் வரும் வருவாயையும் அதன்வழிவரும்
லாபத்தையும் ஆராய்ந்து செயலைச் செய்க.        பாமரன் பொருள்

தெரிந்த இனத்தோடு தேர்ந்துஎண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதுஒன்றும் இல்  குறள் # 462
தேர்ந்தெடுத்த நண்பர்களுடன் ஆராய்ந்து யோசித்து செய்பவர்களுக்கு
செய்யமுடியாத செயல் ஒன்று இல்லை         பாமரன் பொருள்

ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்     குறள் #463
லாபம் கிடைக்குமென எண்ணி முதலைஇழக்கும் செயல்களை
ஆதரிக்கமாட்டார்கள் அறிவுடையோர்.        பாமரன் பொருள்

தெளிவுஇல் அதனைத் தொடங்கார் இளிவுஎன்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர்       குறள் # 464
என்னவாகும்எனும் தெளிவில்லா செயலை துவங்கமாட்டார்கள் இழிவான
நிலைக்கு பயப்படு பவர்கள்          பாமரன் பொருள்

வகையறச் சூழாது எழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோர் ஆறு     குறள் # 465
செயலின் வகைகளை ஆராயாமல் செய்யத் தொடங்குதல் பகைவரை
வலிமையாக நிலைபெறச் செய்யும் ஒரு வழி.        பாமரன் பொருள்

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்   குறள் #466
செய்யக்கூடாதவை செய்வதால் கெடுவான் செய்யவேண்டியவை
செய்யாததாலும் கெட்டுப் போவான்.      பாமரன் பொருள்

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.      குறள் # 667
யோசித்து செயலில் இறங்குக துவங்கியபிறகு
யோசிப்போம் என்பது குற்றமாகும்..        பாமரன் பொருள்

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்   குறள் # 468
முறையாக செய்யப்படாது முயற்சித்த காரியம் பலர்முயன்று
காத்த போதிலும் கெட்டுப் போகும்         பாமரன் பொருள்

நன்றுஆற்றல் உள்ளும் தவறுஉண்டு அவர்அவர்
பண்புஅறிந்து ஆற்றாக் கடை    குறள் #469
நன்மை செய்வதிலும் தவறு உண்டு அவரவர்களுடைய
பண்பை அறிந்து பொருத்தமாக செய்யாவிட்டால்.      பாமரன் பொருள்

எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு
கொள்ளாத கொள்ளாது உலகு.    குறள் # 470
உலகுஇகழாதவற்றை யோசித்துச் செய்யவேண்டும். தம்நிலையோடு

பொருந்தாததை ஏற்றுக்கொள்ளாது உலகம்.       பாமரன் பொருள்.