கற்றதால் கிடைத்த பலன்ஏதுமில்லை இறைவனின்
பாதங்களை வணங்கா விட்டால் பாமரன் குறள்
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழார் எனின் திருக்குறள் 2
வேண்டுதல் வேண்டாமை இல்லா இறைவனடி வணங்குபவருக்கு
எப்போதும் துன்பம் இல்லை
பாமரன் குறள்
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல திருக்குறள் 4
தனக்கிணை இல்லா இறைவனை வணங்குபவரல்லாது மற்றவருக்கு
மனக்கவலை மாற்றுவது கடினம்
பாமரன் குறள்
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால
மனக்கவலை மாற்றல் அரிது