வியாழன், 25 டிசம்பர், 2014

முயற்சி செல்வத்தைப் பெருக்கும்.


பொருட்பால்

அரசியல்

ஆள்வினை உடைமை –
(இடைவிடாத முயற்சி உடையவனாக இருத்தல்)

குறள் 611 முதல் 620


அருமை உடைத்தென்று அசவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.          குறள் # 611
செய்வதற்கு அரிது என்று மனந்தளராமல் இருக்க வேண்டும்
பெருமைக்கான வலிமையை முயற்சி தரும்.    பாமரன் பொருள்

திங்கள், 22 டிசம்பர், 2014

சோம்பலுடையவர் சிறந்த பயனை அடைய முடியாது.

பொருட்பால்    அரசியல்   மடியின்மை  (சோம்பல் இல்லாதிருத்தல்) 601--610

குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசுஊர மாய்ந்து கெடும்.          குறள் # 601
குடிஎன்னும் அணையாத விளக்கானாலும் சோம்பல் எனும்
மாசுபடிய மங்கி மறையும்.        பாமரன் பொருள்.

மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.       குறள் # 602
சோம்பலை விடுத்து வாழ்தல் வேண்டும் தன்குடியை
நற்குடியாக உயர்த்த விரும்புபவர்.     பாமரன் பொருள்

மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னிலும் முந்து.      குறள் # 503
சோம்பலைப் பழக்கமாக்கி வாழும் அறிவில்லாதவன் பிறந்த
குடும்பம் அவனுக்கு முன்பே அழியும்.       பாமரன் பொருள்

குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு.       குறள் # 604
குடும்பப் பெருமை அழிந்து குற்றமும் பெருகும் சோம்பலில் வீ..ழ்ந்து
சிறந்த முயற்சி செய்யாதவருக்கு.      பாமரன் பொருள்

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.              குறள் # 605
காலம் தாழ்த்துதல் மறதி சோம்பல் அதிகதூக்கம் எனும் நான்கும்--
கெடுகெடுகின்ற ஒருவர் விரும்பி ஏறும் வாகனமாகும்.  பாமரன் பொருள் 

படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது.    குறள் # 606
ஆள்பவர் செல்வமெல்லாம் சேர்ந்த போதிலும் சோம்பலுடையவர்
சிறந்த பயனை அடைய முடியாது.      பாமரன் பொருள்

சனி, 29 நவம்பர், 2014

நினைப்பது எல்லாம் உயர்வானதாக இருக்கட்டும்




பொருட்பால்   அரசியல்    ஊக்கம் உடைமை.   குறள்   591 -  600

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று.         குறள்  591
ஊக்கம் உடையவரே ஒன்றை உடையவர். ஊக்கம் இல்லாதவர்
வேறு எல்லாம் உடையவராயினும் உடையவர் ஆவாரோ? பாமரன் பொருள்

உள்ளம் உடைமை உடைமை பொருள்உடைமை
நில்லாது நீங்கி விடும்.        குறள் # 592
ஊக்கம் உடைமையே ஒன்றைப் பெற்றிருப்பது. பிற பொருள் உடைமை
நிலை பெற்று நில்லாது நீங்கிவிடும்.          பாமரன் பொருள்

ஞாயிறு, 23 நவம்பர், 2014

நடப்பவை எல்லாம் விரைவாக அறிதல் ஆள்வோர் கடமை.


பொருட்பால்

 அரசியல் 

ஒற்றாடல் 

குறள் 581 முதல் 590 வரை
     
ஒற்றும் உரைசான்ற நூலும் இவை இரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்.                 குறள் # 581
ஒற்றரும் அரசியல் அறநூலும் ஆகிய இரண்டும்
ஆள்வோர்க்கு கண்என அறிக.                 பாமரன் பொருள்.

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்அறிதல் வேந்தன் தொழில்.                 குறள் # 582
எல்லோருக்கும் நடப்பவை எல்லாம் எப்போதும்
விரைவாக அறிதல் ஆள்வோர் கடமை.           பாமரன் பொருள்.

சனி, 15 நவம்பர், 2014

கண்ணிற்கு நகை கண்ணோட்டம் எனும் பண்பே

பொருட்பால்     அரசியல்     கண்ணோட்டம்      குறள் 571  முதல்  580 வரை

கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு      குறள் #  571
கண்ணோட்டம் என்னும் அழியாப் பேரழகு இருப்பதால்தான்
இவ்வுலகம் அழியாமல் இருக்கிறது.      பாமரன் பொருள்

கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை.          குறள் # 572
கண்ணோட்டத்தால்தான் உலக வாழ்க்கை நடைபெறுகிறது அது இல்லாதவர் வாழ்வது இப்பூமிக்கு சுமை.      பாமரன் பொருள்

புதன், 12 நவம்பர், 2014

நாட்டு பாதுகாப்பைச் செய்துகொள்ளாது ஆட்சிசெய்பவர் அஞ்சி அழிந்து போவார்.


பொருட்பால் -

 அரசியல் - 

வெருவந்தசெய்யாமை


குறள் 561 முதல  570 வரை



தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து  குறள் # 561
குற்றத்தை நடுநிலையோடு ஆராய்ந்து மீண்டும் அக்குற்றத்தைச் செய்யாதபடி
குற்றத்திற்கு ஏற்ப தண்டனை தருவதே நல்ல அரசு.    பாமரன் பொருள்

கடிதோச்சி மெல்ல எறிகநெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்   குறள் # 562
கடுமையாக தண்டிப்பதுபோல தொடங்கி மென்மையாக தண்டிப்பீர் நெடுங்காலம்
மேன்மை நீங்காமல் இருக்க விரும்புபவர்.        பாமரன் பொருள்

செவ்வாய், 2 செப்டம்பர், 2014

அரசுக்குப் புகழ்தருவது நேர்மையான ஆட்சியே


+பொருட்பால்   * அரசியல்   *   கொடுங்கோன்மை  *
குறள்  551 முதல் 560 வரை

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து     குறள்   #  551
கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக் கொடியதாகும் அறவழிமீறி
மக்களுக்கு நல்லன அல்லாதவற்றைச் செய்யும் அரசு.   பாமரன் பொருள் 

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.          குறள்  # 552
ஆயுதம் ஏந்தியகள்வன் பொருளைக் கொடு என மிரட்டுவதுபோன்றது
ஆளுபவர் அதிகாரத்துடன் மிகஅதிக வரிகேட்பது.   பாமரன் பொருள் 

.நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.          குறள் # 553
ஒவ்வொரு நாளும் நன்மைதீமை ஆராய்ந்து ஆட்சிசெய்யா அரசு
ஒவ்வொரு நாளும் சீர்குலைந்து அழியும்.     பாமரன் பொருள் 

கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு        குறள் # 554
பொருளையும் மக்களையும் சேர்த்து இழக்கும் நடுநிலை
ஆராயாமல் தவறாக ஆட்சி செய்யும் அரசு.   பாமரன் பொருள் 
  
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை   குறள்  # 555
துன்பப்பட்டு துன்பம்தாங்காது மக்கள் அழுத கண்ணீர்தான்
அரசின் செல்வத்தை அழிக்கும் ஆயுதம்.     பாமரன் பொருள் 

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி      குறள் # 556
அரசுக்குப் புகழ்தருவது நேர்மையான ஆட்சியே அதுஇல்லையெனில்
புகழ்நிலைக்காமல் சரிந்து போகும்.     பாமரன் பொருள் 

துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு     குறள் # 557
மழைஇல்லாமை உலகுக்கு துன்பம் தருவதுபோல் அரசின்
அருள்இல்லாமை மக்களுக்குத் துயரம் தரும்.    பாமரன் பொருள் 

இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின்.      குறள்  #558
வறுமையைவிட துன்பம்தருவது செல்வமுடைமை தவறாக ஆளும்
ஆட்சியின் கீழ் வாழ நேர்ந்தால்.     பாமரன் பொருள் 

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.      குறள் # 559 
ஆள்பவர் நேர்மைதவறி ஆட்சிசெய்தால் பருவமழை தவறி
மேகம் மழை பெய்யாது போகும்.     பாமரன் பொருள் 

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.       குறள் #560
பால்வளம் குறையும் அறவோர் அறநூல் மறப்பர்

ஆட்சியாளர் முறைப்படி காக்காவிட்டால்.    பாமரன் பொருள்  

வியாழன், 28 ஆகஸ்ட், 2014

வெற்றியைத் தருவது ஆயுதமல்ல நேர்மைதவறா ஆட்சியே


பொருட்பால்  - அரசியல் – செங்கோன்மை (குறள் 541 முதல் 550 வரை)

ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.        குறள் 541
யாரிடமும் ஆராய்ந்து எப்பக்கமும் சாயாது நடுநிலையோடு
ஆராய்ந்து தண்டனை வழங்குவதே நீதிமுறை.        பாமரன் பொருள் 

திங்கள், 26 மே, 2014

மறதி புகழை அழிக்கும்

   பொருட்பால்              அரசியல்          அதிகாரம்; பொச்சாவாமை
குறள் 531 முதல் 540 வரை
இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு     குறள் # 531
அளவுக்கதிகமான கோபத்தைவிட தீமையானது- மிகுந்த
மகிழ்ச்சியில் வரும் மறதி.      பாமரன் பொருள்

புதன், 16 ஏப்ரல், 2014

பகிர்ந்துண்ணும் பழக்கம் உள்ளவர்களுக்கே மேன்மை உண்டு

திருக்குறள்  
பொருட்பால்   
அரசியல் 
அதிகாரம்  சுற்றந்தழால்


பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள.     குறள் # 521
வறியவனான நேரத்திலும் பழையஉறவைப் பாராட்டும் பண்பு
உறவினர்களிடம் மட்டுமே உண்டு.    பாமரன் பொருள்.

விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும் தரும்     குறள் # 522
அன்பு நீங்காத உறவினர் ஒருவனுக்குக் கிடைத்தால் வளர்ச்சி குறையாத
மேன்மைகள் பலவும் தரும்.  பாமரன் பொருள்.

ஞாயிறு, 23 மார்ச், 2014

இதனை இதனால் இவன் முடிப்பான் என ஆராய்ந்து அவனிடம் தருக.. நிர்வாக இயல் தத்துவத்தை அன்றே சொன்ன வள்ளுவர்


திருக்குறள்

பொருட்பால்

அதிகாரம்; தெரிந்து வினையாடல்

குறள் 511 முதல் 520 வரை



நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்   குறள் # 511
ஒரு செயலின் நன்மையையும், தீமையையும்,ஆராய்ந்து நலம்தரும்
செயலை விரும்புபவனை வேலையில் சேர்க்கவேண்டும்   பாமரன் பொருள்.

செவ்வாய், 18 மார்ச், 2014

உறவில்லாதவர் பற்றில்லாதவராதலால் பழிக்கு வெட்கப்படமாட்டார்.




திருக்குறள்
பொருட்பால்
அதிகாரம் : தெரிந்து தெளிதல்
குறள் 501 முதல் 510 வரை




அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்        குறள் # 501.
அறம், பொருள், இன்பம், உயிருக்கான அச்சம் எனும் நான்கினையும்
ஆராய்ந்து ஒருவனைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.        பாமரன் பொருள்

ஞாயிறு, 9 மார்ச், 2014

சரியான இடத்தைத் தேர்ந்தெடுக்கும் வரை எச்செயலையும் தொடங்க வேண்டாம்.

                                     
                                       திருக்குறள்.
                                   
                                     பொருட்பால்

                              அதிகாரம்; இடனறிதல்

                            குறள் 491 முதல் 500 வரை




தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது.       குறள் # 491
தொடங்காதீர் எச்செயலையும் பகைவரை இகழாதீர் முழுவதும்
சரியான இடத்தைக் .காணும் முன்னர்.       .    பாமரன் பொருள்  .

திங்கள், 24 பிப்ரவரி, 2014

உரிய காலத்தை அறிந்து செய்தால் அரிய செயல் என்பது உண்டோ?

பொருட்பால்    
அரசியல்  
அதிகாரம்; காலமறிதல்.  
குறள் 481 முதல் 490 வரை.
பகல் வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.       குறள் 481
பகலில் வலிமைமிக்க கோட்டானை காக்கை வெல்லும். பகைவரை வெல்ல
தலைவருக்கு ஏற்ற காலம் வேண்டும்.           பாமரன் குறள்.

வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

வருவாய் குறைவாக இருந்தாலும் தீங்கு இல்லை

                                                             பொருட்பால்
        அரசியல்
அதிகாரம்; வலியறிதல்
குறள் 471 முதல் 480 வரை



வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்    குறள் # 471
செயலின்வலிமையும் தனதுவலிமையும் பகைவரின் வலிமையும்இருவரது
துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செய்க.      பாமரன் பொருள்

ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்கு செல்லாதது இல்     குறள் # 472.
தம்மால் முடியும்செயல் அறிந்து அதைச்செய்வதற்கான வழியை சிந்தித்து
முயல்பவருக்கு முடியாதது ஏதுமில்லை                    jqபாமரன் பொருள்

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.    குறள் # 473
தன்னுடைய ஆற்றலை அறியாமல் ஆர்வத்தினால் தொடங்கி
இடையில் முடிக்க முடியாது கெட்டவர் பலர்.      பாமரன் பொருள்

அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.   குறள் # 474
மற்றவர்களோடு ஒத்துப்போகாமல் தன்வலிமையையும் அறியாமல் தன்னைப்
பெரிதாக எண்ணுபவன் விரைவில் கெடுவான்.       பாமரன் பொருள்

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின் குறள் # 475
மயில்தோகையேயானாலும் வண்டியின் அச்சு முறியும் அதனை
அளவிற்கு அதிகமாக வண்டியில் ஏற்றினால்.               பாமரன் பொருள்

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்     குறள் # 476 
மரத்தின் கிளைநுனியில் ஏறியவர் அதையும்தாண்டி செல்லமுயன்றால்
அம்முயற்சி அவர் உயிருக்கு முடிவாகி விடும்        பாமரன் பொருள்

ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி.     குறள் # 477
வருவாயின் அளவையறிந்து தருக, அதுவே பொருளைக்
காத்துக்கொண்டு தரும் வழியாகும்.           பாமரன் பொருள்

ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை.       குறள் #478
வருவாய் குறைவாக இருந்தாலும் தீங்கு இல்லை
செலவு அதிகமாகாமல் இருந்தால்.           பாமரன் பொருள்

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.
பொருளின் அளவறிந்து வாழாதவனின் வாழ்க்கை வளமானதாகத் தோன்றி
இல்லாமல் அழிந்து விடும்                           பாமரன் பொருள்

உளவரை தூக்காத ஒப்புர வாண்மை 
வளவரை வல்லைக் கெடும்   குறள் # 480
பொருள் உள்ள அளவை ஆராயாது செய்யும் உதவிகளால்

செல்வத்தின் அளவு விரைவில் குறையும்.            பாமரன் பொருள்