ஞாயிறு, 24 ஜனவரி, 2016

அவையின் தன்மையையும், நேரத்தையும், நிலையையும் அறிந்து பேசவேண்டும்



திருக்குறள் பொருட்பால்    
   
அமைச்சியல்       

அவைபறிதல்
                   
        குறள் 711 முதல் 720 வரை       


அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்     குறள் # 711
அவையின் தன்மையறிந்து சரியான சொல்லை ஆராய்ந்து சொல்லுக
சொற்களை நன்கறிந்த தூய்மையானவர்.   பாமரன் பொருள்

இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர்       குறள் # 712
அவையின் நேரத்தையும் நிலைமையையும் நன்குணர்ந்து சொல்லுக
சொற்களின் நடையை அறிந்த நல் அறிஞர்கள். .   பாமரன் பொருள்

புதன், 9 டிசம்பர், 2015

கண்ணாடி போல நெஞ்சில் நிகழ்வதை காட்டிவிடும் ஒருவரது முகம்.


பொருட்பால்    
   
அமைச்சியல்       

குறிப்பறிதல்
                   
        குறள் 701 முதல் 710 வரை            

கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கனி.     குறள் # 701
ஏதும் சொல்லாமலே முகக்குறிப்பால் அறிகிறவன் எப்போதும்
வற்றாக்கடல் சூழ்உலகிற்கு அணிகலன்.       பாமரன் பொருள்

புதன், 11 நவம்பர், 2015

காக்க விரும்பினால் அரியதவறு நேராது காக்கவும்

                 காக்க விரும்பினால் அரியதவறு நேராது காக்கவும்
 அமைச்சியல்                        , பொருட்பால்,                        மன்னரைச் சேர்ந்தொழுதல் 
                                                     , குறள் 691-700
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொ.ழுகு வார்    குறள் # 691
அதிகம் நீங்காதும் அதிகம் நெருங்காதும் தீயில் குளிர்காய்வது போல் இருப்பர்
அரசைச் சார்ந்து வாழ்பவர்.     பாமரன் பொருள்

செவ்வாய், 27 அக்டோபர், 2015

தனக்கு அழிவைத் தருவதாயினும் அஞ்சாது பணியாற்றுபவரே நல்ல தூதர்

பொருட்பால்               அமைச்சியல்                 தூது
                         681 முதல் 690 வரை

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு     குறள் # 681
அன்புள்ளவராதல் நல்ல குடிப்பிறப்பு அரசுவிரும்பும்
நற்பண்பு உள்ளவராதல் தூதருக்கான தகுதி     பாமரன் பொருள்

அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று               குறள் # 682
அன்பு அறிவு ஆராய்ந்து பேசும் சொல்திறமை தூதருக்கு
தேவையான முக்கிய மூன்று பண்புகள்         பாமரன் பொருள்

ஞாயிறு, 21 ஜூன், 2015

காலந்தாழ்த்தாது செய்யவேண்டியவற்றை தாமதியாமல் செய்க


பொருட்பால்    அமைச்சியல்      வினைசெயல்வகை
குறள்  671 முதல் 680 வரை.

சூழ்ச்சி முடிவு துணிவுஎய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது.    குறள் 671
ஆராய்தலின் முடிவு செய்யும் துணிவுபெறல் அத்துணிவை செயல்படுத்த
காலந்தாழ்த்துதல் தீங்கானது.       பாமரன் பொருள்

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.    குறள் 672
மெதுவாகச் செய்யக் கூடியவற்றை தாமதித்துச் செய்யலாம், தாமதிக்கக்காதீர்
காலந்தாழ்த்தாது செய்ய வேண்டிய வேலைகளை.  பாமரன் பொருள்

புதன், 29 ஏப்ரல், 2015

சொல்வது எல்லோருக்கும் சுலபம்

பொருட்பால்  அமைச்சியல்     வினைத்திட்பம்    
குறள் எண் 661 முதல் 670

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற           குறள் 661
செயலில் உறுதி என்பது ஒருவரின் மனஉறுதியே
மற்றவை எல்லாம் வேறு.            பாமரன் பொருள்.

ஊறுஒரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறுஎன்பர் ஆய்ந்தவர் கோள்.      குறள் 662
இடையூறை நீக்குதல் அதுவந்தால் மனம் தளராமை இவ்விரண்டும்
வழிஎன்பது ஆராய்தறிந்தவரின் கொள்கை.       பாமரன் பொருள்.

கடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமம் தரும்.               குறள் 663
செயல்முடிவில் தெரியும்படி செய்யும்தகுதியே ஆளுமை இடையில் தெரிந்தால்
நீங்காத துன்பத்தைத் தரும்.            பாமரன் பொருள்.

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.           குறள் 664
சொல்லுவது எல்லோருக்கும் எளிது, கடினம்
சொல்லிய படி அதைச் செய்தல்.         பாமரன் பொருள்.

ஞாயிறு, 29 மார்ச், 2015

துன்பம் ஏற்பட்டாலும் இழிவான செயல் செய்யமாட்டார் தெளிந்த அறிவுடையவர்


பொருட்பால்  
அமைச்சியல்  
வினைத்தூய்மை  

குறள் 651 முதல் 660 வரை


துணைநலம் ஆக்கம் தருஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும்    குறள்  # 651
ஒருவருக்கு நல்லதுணை வலிமையைத் தரும் நற்செயல்
விரும்பிய எல்லாம் தரும்.       பாமரன் பொருள்

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.       குறள் # 652
என்றும் விட்டொழிக்க வேண்டும், புகழையும்
நன்மையையும் தராத செயல்களை.     பாமரன் பொருள்

ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு பவர்.     குறள்  # 653
மேன்மையை அழிக்கும் செயலை விட வேண்டும் செயலில்
மென்மேலும் உயர முயல்பவர்         பாமரன் பொருள்


இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்.        குறள் # 654

வியாழன், 12 மார்ச், 2015

பேச்சில் தவறு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்


பொருட்பால்   அமைச்சியல்    சொல்வன்மை   குறள் 641 முதல் 650 வரை

நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று.      குறள் 641
நாவன்மை ஒருவகைச் செல்வம் அந்த தனிச்சிறப்புடைய நாநலம்
எந்த நலங்களிலும் அடங்குவது அன்று         பாமரன் பொருள்

ஆக்கமும் கேடும் அதனால் வருதலான்
காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு.      குறள் # 642
நன்மையும் கேடும் சொல்லால் வருவதால்
பேச்சில் தவறு வராமல் காத்துக்கொள்ள வேண்டும். பாமரன் பொருள்

வியாழன், 29 ஜனவரி, 2015

துன்பத்திற்கே துன்பம் தருவர், துன்பத்திற்கு வருந்தி கலங்காதவர்.


பொருட்பால்       அரசியல்     இடுக்கணழியாமை   குறள் 621 --630

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்பது இல்     குறள் # 621
துன்பம் வரும்போது மகிழ்க, துன்பத்தை வெல்ல வல்லது
அதனைப் போன்று வேறு ஒன்றும் இல்லை.     பாமரன் பொருள்

வியாழன், 25 டிசம்பர், 2014

முயற்சி செல்வத்தைப் பெருக்கும்.


பொருட்பால்

அரசியல்

ஆள்வினை உடைமை –
(இடைவிடாத முயற்சி உடையவனாக இருத்தல்)

குறள் 611 முதல் 620


அருமை உடைத்தென்று அசவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.          குறள் # 611
செய்வதற்கு அரிது என்று மனந்தளராமல் இருக்க வேண்டும்
பெருமைக்கான வலிமையை முயற்சி தரும்.    பாமரன் பொருள்

திங்கள், 22 டிசம்பர், 2014

சோம்பலுடையவர் சிறந்த பயனை அடைய முடியாது.

பொருட்பால்    அரசியல்   மடியின்மை  (சோம்பல் இல்லாதிருத்தல்) 601--610

குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசுஊர மாய்ந்து கெடும்.          குறள் # 601
குடிஎன்னும் அணையாத விளக்கானாலும் சோம்பல் எனும்
மாசுபடிய மங்கி மறையும்.        பாமரன் பொருள்.

மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.       குறள் # 602
சோம்பலை விடுத்து வாழ்தல் வேண்டும் தன்குடியை
நற்குடியாக உயர்த்த விரும்புபவர்.     பாமரன் பொருள்

மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னிலும் முந்து.      குறள் # 503
சோம்பலைப் பழக்கமாக்கி வாழும் அறிவில்லாதவன் பிறந்த
குடும்பம் அவனுக்கு முன்பே அழியும்.       பாமரன் பொருள்

குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு.       குறள் # 604
குடும்பப் பெருமை அழிந்து குற்றமும் பெருகும் சோம்பலில் வீ..ழ்ந்து
சிறந்த முயற்சி செய்யாதவருக்கு.      பாமரன் பொருள்

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.              குறள் # 605
காலம் தாழ்த்துதல் மறதி சோம்பல் அதிகதூக்கம் எனும் நான்கும்--
கெடுகெடுகின்ற ஒருவர் விரும்பி ஏறும் வாகனமாகும்.  பாமரன் பொருள் 

படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது.    குறள் # 606
ஆள்பவர் செல்வமெல்லாம் சேர்ந்த போதிலும் சோம்பலுடையவர்
சிறந்த பயனை அடைய முடியாது.      பாமரன் பொருள்

சனி, 29 நவம்பர், 2014

நினைப்பது எல்லாம் உயர்வானதாக இருக்கட்டும்




பொருட்பால்   அரசியல்    ஊக்கம் உடைமை.   குறள்   591 -  600

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று.         குறள்  591
ஊக்கம் உடையவரே ஒன்றை உடையவர். ஊக்கம் இல்லாதவர்
வேறு எல்லாம் உடையவராயினும் உடையவர் ஆவாரோ? பாமரன் பொருள்

உள்ளம் உடைமை உடைமை பொருள்உடைமை
நில்லாது நீங்கி விடும்.        குறள் # 592
ஊக்கம் உடைமையே ஒன்றைப் பெற்றிருப்பது. பிற பொருள் உடைமை
நிலை பெற்று நில்லாது நீங்கிவிடும்.          பாமரன் பொருள்

ஞாயிறு, 23 நவம்பர், 2014

நடப்பவை எல்லாம் விரைவாக அறிதல் ஆள்வோர் கடமை.


பொருட்பால்

 அரசியல் 

ஒற்றாடல் 

குறள் 581 முதல் 590 வரை
     
ஒற்றும் உரைசான்ற நூலும் இவை இரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்.                 குறள் # 581
ஒற்றரும் அரசியல் அறநூலும் ஆகிய இரண்டும்
ஆள்வோர்க்கு கண்என அறிக.                 பாமரன் பொருள்.

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்அறிதல் வேந்தன் தொழில்.                 குறள் # 582
எல்லோருக்கும் நடப்பவை எல்லாம் எப்போதும்
விரைவாக அறிதல் ஆள்வோர் கடமை.           பாமரன் பொருள்.

சனி, 15 நவம்பர், 2014

கண்ணிற்கு நகை கண்ணோட்டம் எனும் பண்பே

பொருட்பால்     அரசியல்     கண்ணோட்டம்      குறள் 571  முதல்  580 வரை

கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு      குறள் #  571
கண்ணோட்டம் என்னும் அழியாப் பேரழகு இருப்பதால்தான்
இவ்வுலகம் அழியாமல் இருக்கிறது.      பாமரன் பொருள்

கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை.          குறள் # 572
கண்ணோட்டத்தால்தான் உலக வாழ்க்கை நடைபெறுகிறது அது இல்லாதவர் வாழ்வது இப்பூமிக்கு சுமை.      பாமரன் பொருள்