புதன், 9 டிசம்பர், 2015

கண்ணாடி போல நெஞ்சில் நிகழ்வதை காட்டிவிடும் ஒருவரது முகம்.


பொருட்பால்    
   
அமைச்சியல்       

குறிப்பறிதல்
                   
        குறள் 701 முதல் 710 வரை            

கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கனி.     குறள் # 701
ஏதும் சொல்லாமலே முகக்குறிப்பால் அறிகிறவன் எப்போதும்
வற்றாக்கடல் சூழ்உலகிற்கு அணிகலன்.       பாமரன் பொருள்


ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்.    குறள் # 702
ஐயப்படாமல் மனத்தில் உள்ளதை உணர்ந்து கொள்ளக்கூடியவனை
தெய்வத்திற்கு சமமாக மதிக்கலாம்.     பாமரன் பொருள்.

குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல்.    குறள் # 703                       
முகக்குறிப்பைக் கொண்டு மனக்குறிப்பை உணரக்கூடியவரை செல்வத்துள்
எதைக்கொடுத்தாவது துணையாகக் கொள்ளவேண்டும்     பாமரன் பொருள்.

குறித்தது கூறாமைக் கொள்வரோ டேனை     
உறுப்போ ரனையரால் வேறு.     குறள் # 704
நினைத்ததை அவர் சொல்லாமலே அறியக்கூடியவர் மற்றவர் போல
உறுப்பால் ஒத்தவர் அறிவால் வேறுபட்டவர்.            பாமரன் பொருள்.

குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்                         
என்ன பயத்தவோ கண்     குறள் # 705
முகக்குறிப்பால் உள்ளத்தில் இருப்பதை உணராவிட்டால் உறுப்புகளுள்
கண்களுக்கு என்ன பயன்.      பாமரன் பொருள்

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்     குறள் # 705
அருகிலுள்ள பொருளைக் காட்டுகிற கண்ணாடி போல நெஞ்சில்
நிகழ்வதை காட்டிவிடும் ஒருவரது முகம்.      பாமரன் பொருள்.

முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும்.      குறள் # 707
முகத்தைவிட அறிவுமிக்கது உண்டோ விரும்பினாலும்
வெறுத்தாலும் முந்திக்கொண்டு தெரிவித்துவிடுமே    பாமரன் பொருள்.

முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி 
உற்ற துணர்வார்ப் பெறின்    குறள் # 708
முகத்தைப் பார்த்து நின்றாலே போதும் உள்ளத்தில் உள்ளதை
குறிப்பால் உணரக்கூடியவரைப் பெற்றிருந்தால்.      பாமரன் பொருள்

பகையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின்.     குறள் # 709
பகையையும் நட்பையும் ஒருவரின் கண்ணே சொல்லிவிடும் பார்வையின்
வேறுபாடுகளை புரிந்து கொள்ளக்கூடியவரைப் பெற்றிருந்தால்.       பாமரன் பொருள்

நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்                                   
கண்ணல்லது இல்லை பிற.    குறள் # 710
நுட்பமான அறிவுடையவர் மனக்குறிப்பை அளக்குங்கருவி எதுவென ஆய்ந்து பார்த்தால்

கண்களல்லாமல் வேறு இல்லை.                     பாமரன் பொருள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.