ஞாயிறு, 21 ஜூன், 2015

காலந்தாழ்த்தாது செய்யவேண்டியவற்றை தாமதியாமல் செய்க


பொருட்பால்    அமைச்சியல்      வினைசெயல்வகை
குறள்  671 முதல் 680 வரை.

சூழ்ச்சி முடிவு துணிவுஎய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது.    குறள் 671
ஆராய்தலின் முடிவு செய்யும் துணிவுபெறல் அத்துணிவை செயல்படுத்த
காலந்தாழ்த்துதல் தீங்கானது.       பாமரன் பொருள்

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.    குறள் 672
மெதுவாகச் செய்யக் கூடியவற்றை தாமதித்துச் செய்யலாம், தாமதிக்கக்காதீர்
காலந்தாழ்த்தாது செய்ய வேண்டிய வேலைகளை.  பாமரன் பொருள்

புதன், 29 ஏப்ரல், 2015

சொல்வது எல்லோருக்கும் சுலபம்

பொருட்பால்  அமைச்சியல்     வினைத்திட்பம்    
குறள் எண் 661 முதல் 670

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற           குறள் 661
செயலில் உறுதி என்பது ஒருவரின் மனஉறுதியே
மற்றவை எல்லாம் வேறு.            பாமரன் பொருள்.

ஊறுஒரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறுஎன்பர் ஆய்ந்தவர் கோள்.      குறள் 662
இடையூறை நீக்குதல் அதுவந்தால் மனம் தளராமை இவ்விரண்டும்
வழிஎன்பது ஆராய்தறிந்தவரின் கொள்கை.       பாமரன் பொருள்.

கடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமம் தரும்.               குறள் 663
செயல்முடிவில் தெரியும்படி செய்யும்தகுதியே ஆளுமை இடையில் தெரிந்தால்
நீங்காத துன்பத்தைத் தரும்.            பாமரன் பொருள்.

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.           குறள் 664
சொல்லுவது எல்லோருக்கும் எளிது, கடினம்
சொல்லிய படி அதைச் செய்தல்.         பாமரன் பொருள்.

ஞாயிறு, 29 மார்ச், 2015

துன்பம் ஏற்பட்டாலும் இழிவான செயல் செய்யமாட்டார் தெளிந்த அறிவுடையவர்


பொருட்பால்  
அமைச்சியல்  
வினைத்தூய்மை  

குறள் 651 முதல் 660 வரை


துணைநலம் ஆக்கம் தருஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும்    குறள்  # 651
ஒருவருக்கு நல்லதுணை வலிமையைத் தரும் நற்செயல்
விரும்பிய எல்லாம் தரும்.       பாமரன் பொருள்

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.       குறள் # 652
என்றும் விட்டொழிக்க வேண்டும், புகழையும்
நன்மையையும் தராத செயல்களை.     பாமரன் பொருள்

ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு பவர்.     குறள்  # 653
மேன்மையை அழிக்கும் செயலை விட வேண்டும் செயலில்
மென்மேலும் உயர முயல்பவர்         பாமரன் பொருள்


இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்.        குறள் # 654

வியாழன், 12 மார்ச், 2015

பேச்சில் தவறு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்


பொருட்பால்   அமைச்சியல்    சொல்வன்மை   குறள் 641 முதல் 650 வரை

நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று.      குறள் 641
நாவன்மை ஒருவகைச் செல்வம் அந்த தனிச்சிறப்புடைய நாநலம்
எந்த நலங்களிலும் அடங்குவது அன்று         பாமரன் பொருள்

ஆக்கமும் கேடும் அதனால் வருதலான்
காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு.      குறள் # 642
நன்மையும் கேடும் சொல்லால் வருவதால்
பேச்சில் தவறு வராமல் காத்துக்கொள்ள வேண்டும். பாமரன் பொருள்

வியாழன், 29 ஜனவரி, 2015

துன்பத்திற்கே துன்பம் தருவர், துன்பத்திற்கு வருந்தி கலங்காதவர்.


பொருட்பால்       அரசியல்     இடுக்கணழியாமை   குறள் 621 --630

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்பது இல்     குறள் # 621
துன்பம் வரும்போது மகிழ்க, துன்பத்தை வெல்ல வல்லது
அதனைப் போன்று வேறு ஒன்றும் இல்லை.     பாமரன் பொருள்

வியாழன், 25 டிசம்பர், 2014

முயற்சி செல்வத்தைப் பெருக்கும்.


பொருட்பால்

அரசியல்

ஆள்வினை உடைமை –
(இடைவிடாத முயற்சி உடையவனாக இருத்தல்)

குறள் 611 முதல் 620


அருமை உடைத்தென்று அசவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.          குறள் # 611
செய்வதற்கு அரிது என்று மனந்தளராமல் இருக்க வேண்டும்
பெருமைக்கான வலிமையை முயற்சி தரும்.    பாமரன் பொருள்

திங்கள், 22 டிசம்பர், 2014

சோம்பலுடையவர் சிறந்த பயனை அடைய முடியாது.

பொருட்பால்    அரசியல்   மடியின்மை  (சோம்பல் இல்லாதிருத்தல்) 601--610

குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசுஊர மாய்ந்து கெடும்.          குறள் # 601
குடிஎன்னும் அணையாத விளக்கானாலும் சோம்பல் எனும்
மாசுபடிய மங்கி மறையும்.        பாமரன் பொருள்.

மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.       குறள் # 602
சோம்பலை விடுத்து வாழ்தல் வேண்டும் தன்குடியை
நற்குடியாக உயர்த்த விரும்புபவர்.     பாமரன் பொருள்

மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னிலும் முந்து.      குறள் # 503
சோம்பலைப் பழக்கமாக்கி வாழும் அறிவில்லாதவன் பிறந்த
குடும்பம் அவனுக்கு முன்பே அழியும்.       பாமரன் பொருள்

குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு.       குறள் # 604
குடும்பப் பெருமை அழிந்து குற்றமும் பெருகும் சோம்பலில் வீ..ழ்ந்து
சிறந்த முயற்சி செய்யாதவருக்கு.      பாமரன் பொருள்

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.              குறள் # 605
காலம் தாழ்த்துதல் மறதி சோம்பல் அதிகதூக்கம் எனும் நான்கும்--
கெடுகெடுகின்ற ஒருவர் விரும்பி ஏறும் வாகனமாகும்.  பாமரன் பொருள் 

படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது.    குறள் # 606
ஆள்பவர் செல்வமெல்லாம் சேர்ந்த போதிலும் சோம்பலுடையவர்
சிறந்த பயனை அடைய முடியாது.      பாமரன் பொருள்

சனி, 29 நவம்பர், 2014

நினைப்பது எல்லாம் உயர்வானதாக இருக்கட்டும்




பொருட்பால்   அரசியல்    ஊக்கம் உடைமை.   குறள்   591 -  600

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று.         குறள்  591
ஊக்கம் உடையவரே ஒன்றை உடையவர். ஊக்கம் இல்லாதவர்
வேறு எல்லாம் உடையவராயினும் உடையவர் ஆவாரோ? பாமரன் பொருள்

உள்ளம் உடைமை உடைமை பொருள்உடைமை
நில்லாது நீங்கி விடும்.        குறள் # 592
ஊக்கம் உடைமையே ஒன்றைப் பெற்றிருப்பது. பிற பொருள் உடைமை
நிலை பெற்று நில்லாது நீங்கிவிடும்.          பாமரன் பொருள்

ஞாயிறு, 23 நவம்பர், 2014

நடப்பவை எல்லாம் விரைவாக அறிதல் ஆள்வோர் கடமை.


பொருட்பால்

 அரசியல் 

ஒற்றாடல் 

குறள் 581 முதல் 590 வரை
     
ஒற்றும் உரைசான்ற நூலும் இவை இரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்.                 குறள் # 581
ஒற்றரும் அரசியல் அறநூலும் ஆகிய இரண்டும்
ஆள்வோர்க்கு கண்என அறிக.                 பாமரன் பொருள்.

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்அறிதல் வேந்தன் தொழில்.                 குறள் # 582
எல்லோருக்கும் நடப்பவை எல்லாம் எப்போதும்
விரைவாக அறிதல் ஆள்வோர் கடமை.           பாமரன் பொருள்.

சனி, 15 நவம்பர், 2014

கண்ணிற்கு நகை கண்ணோட்டம் எனும் பண்பே

பொருட்பால்     அரசியல்     கண்ணோட்டம்      குறள் 571  முதல்  580 வரை

கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு      குறள் #  571
கண்ணோட்டம் என்னும் அழியாப் பேரழகு இருப்பதால்தான்
இவ்வுலகம் அழியாமல் இருக்கிறது.      பாமரன் பொருள்

கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை.          குறள் # 572
கண்ணோட்டத்தால்தான் உலக வாழ்க்கை நடைபெறுகிறது அது இல்லாதவர் வாழ்வது இப்பூமிக்கு சுமை.      பாமரன் பொருள்

புதன், 12 நவம்பர், 2014

நாட்டு பாதுகாப்பைச் செய்துகொள்ளாது ஆட்சிசெய்பவர் அஞ்சி அழிந்து போவார்.


பொருட்பால் -

 அரசியல் - 

வெருவந்தசெய்யாமை


குறள் 561 முதல  570 வரை



தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து  குறள் # 561
குற்றத்தை நடுநிலையோடு ஆராய்ந்து மீண்டும் அக்குற்றத்தைச் செய்யாதபடி
குற்றத்திற்கு ஏற்ப தண்டனை தருவதே நல்ல அரசு.    பாமரன் பொருள்

கடிதோச்சி மெல்ல எறிகநெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்   குறள் # 562
கடுமையாக தண்டிப்பதுபோல தொடங்கி மென்மையாக தண்டிப்பீர் நெடுங்காலம்
மேன்மை நீங்காமல் இருக்க விரும்புபவர்.        பாமரன் பொருள்

செவ்வாய், 2 செப்டம்பர், 2014

அரசுக்குப் புகழ்தருவது நேர்மையான ஆட்சியே


+பொருட்பால்   * அரசியல்   *   கொடுங்கோன்மை  *
குறள்  551 முதல் 560 வரை

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து     குறள்   #  551
கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக் கொடியதாகும் அறவழிமீறி
மக்களுக்கு நல்லன அல்லாதவற்றைச் செய்யும் அரசு.   பாமரன் பொருள் 

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.          குறள்  # 552
ஆயுதம் ஏந்தியகள்வன் பொருளைக் கொடு என மிரட்டுவதுபோன்றது
ஆளுபவர் அதிகாரத்துடன் மிகஅதிக வரிகேட்பது.   பாமரன் பொருள் 

.நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.          குறள் # 553
ஒவ்வொரு நாளும் நன்மைதீமை ஆராய்ந்து ஆட்சிசெய்யா அரசு
ஒவ்வொரு நாளும் சீர்குலைந்து அழியும்.     பாமரன் பொருள் 

கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு        குறள் # 554
பொருளையும் மக்களையும் சேர்த்து இழக்கும் நடுநிலை
ஆராயாமல் தவறாக ஆட்சி செய்யும் அரசு.   பாமரன் பொருள் 
  
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை   குறள்  # 555
துன்பப்பட்டு துன்பம்தாங்காது மக்கள் அழுத கண்ணீர்தான்
அரசின் செல்வத்தை அழிக்கும் ஆயுதம்.     பாமரன் பொருள் 

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி      குறள் # 556
அரசுக்குப் புகழ்தருவது நேர்மையான ஆட்சியே அதுஇல்லையெனில்
புகழ்நிலைக்காமல் சரிந்து போகும்.     பாமரன் பொருள் 

துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு     குறள் # 557
மழைஇல்லாமை உலகுக்கு துன்பம் தருவதுபோல் அரசின்
அருள்இல்லாமை மக்களுக்குத் துயரம் தரும்.    பாமரன் பொருள் 

இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின்.      குறள்  #558
வறுமையைவிட துன்பம்தருவது செல்வமுடைமை தவறாக ஆளும்
ஆட்சியின் கீழ் வாழ நேர்ந்தால்.     பாமரன் பொருள் 

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.      குறள் # 559 
ஆள்பவர் நேர்மைதவறி ஆட்சிசெய்தால் பருவமழை தவறி
மேகம் மழை பெய்யாது போகும்.     பாமரன் பொருள் 

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.       குறள் #560
பால்வளம் குறையும் அறவோர் அறநூல் மறப்பர்

ஆட்சியாளர் முறைப்படி காக்காவிட்டால்.    பாமரன் பொருள்  

வியாழன், 28 ஆகஸ்ட், 2014

வெற்றியைத் தருவது ஆயுதமல்ல நேர்மைதவறா ஆட்சியே


பொருட்பால்  - அரசியல் – செங்கோன்மை (குறள் 541 முதல் 550 வரை)

ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.        குறள் 541
யாரிடமும் ஆராய்ந்து எப்பக்கமும் சாயாது நடுநிலையோடு
ஆராய்ந்து தண்டனை வழங்குவதே நீதிமுறை.        பாமரன் பொருள் 

திங்கள், 26 மே, 2014

மறதி புகழை அழிக்கும்

   பொருட்பால்              அரசியல்          அதிகாரம்; பொச்சாவாமை
குறள் 531 முதல் 540 வரை
இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு     குறள் # 531
அளவுக்கதிகமான கோபத்தைவிட தீமையானது- மிகுந்த
மகிழ்ச்சியில் வரும் மறதி.      பாமரன் பொருள்

புதன், 16 ஏப்ரல், 2014

பகிர்ந்துண்ணும் பழக்கம் உள்ளவர்களுக்கே மேன்மை உண்டு

திருக்குறள்  
பொருட்பால்   
அரசியல் 
அதிகாரம்  சுற்றந்தழால்


பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள.     குறள் # 521
வறியவனான நேரத்திலும் பழையஉறவைப் பாராட்டும் பண்பு
உறவினர்களிடம் மட்டுமே உண்டு.    பாமரன் பொருள்.

விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும் தரும்     குறள் # 522
அன்பு நீங்காத உறவினர் ஒருவனுக்குக் கிடைத்தால் வளர்ச்சி குறையாத
மேன்மைகள் பலவும் தரும்.  பாமரன் பொருள்.