வெள்ளி, 26 அக்டோபர், 2012

நல்லுதவியை மறப்பது நல்லதல்ல


மறவாதீர் குற்றமற்றவரின் நட்பு,விட்டுவிடாதீர்
துன்பத்தில் உதவி செய்தவர் நட்பு
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பு ஆயார் நட்பு   குறள்     106

எந்நாளும் எப்போதும் நினைப்பர் நம்முடைய
துன்பம் போக்கியவர் நட்பு
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தம்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு.         குறள்   107

நல்லுதவியை மறப்பது நல்லதல்ல தீமையை
அப்பொழுதே மறப்பது நல்லது.
நன்றிமறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.         குறள்   108

கொலைபோன்ற தீமை செய்தாலும் அவர் செய்த
நன்மை ஒன்றை நினைத்தால் கோபம்போகும்.
கொன்றன்ன இன்னா செயினும் அவர் செய்த
ஒன்று நன்றுள்ளக் கெடும்.        குறள்  109

எந்த அறத்தை அழித்தாலும் வாழ்க்கை உண்டு வாழ்வில்லை
செய்த உதவியை மறந்தவருக்கு.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம்  உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகர்க்கு        குறள்  110

நடுநிலை எனபது நல்லது  பலதிறம்பட்டவருடன்
இணைந்து பழகும் போது
தகுதிஎன ஒன்றுநன்றே பகுதியான்
பாற்பட்டு ஒழுகப்பெறின்             குறள்-111
.

ஞாயிறு, 21 அக்டோபர், 2012

நேரத்தில் செய்த உதவி உலகத்தைவிட பெரியது


(உதவி) செய்யாமல் செய்த உதவிக்கு பூவுலகமும்
வானுலகமும் தந்தாலும் ஈடாகாது
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது  குறள் -101

தேவையான நேரத்தில் செய்த உதவி சிறிதெனினும்
உலகத்தைவிட மிகப் பெரியது
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மிகப் பெரிது     குறள் 102

பலன் எதிர்பாராமல் செய்தஉதவியை ஆராய்ந்தால்
நன்மை கடலைவிடப் பெரியது
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது    குறள்    103

தினையளவே உதவி செய்தாலும் பனைமர அளவாகக்
கருதுவார் அதன் பலன் தெரிந்தவர்
தினைத்துணை நன்றி செயினும் பனைத்தூணையாக்
கொள்வர் பயன்தெரி வார்    குறள்   104

உதவியின் அளவு அவ்உதவியைப் பொருத்ததல்ல உதவி
பெற்றவரின் பண்பைப் பொருத்தது 
உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து   குறள்  105

வெள்ளி, 19 அக்டோபர், 2012

இனிய சொல் எப்போதும் இன்பம் தரும்


பணிவுஉடையவர் இனிதேபேசுபவர் ஆவது ஒருவருக்கு
நகைபோல மற்றவை அல்ல
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு  
அணிஅல்ல மற்றுப் பிற       குறள் 95

தீயவை மறைந்து நன்மை பெருகும் நல்லவற்றை
எதிர்நோக்கி இனிதே பேசினால் 
அல்லவை தேயஅறம் பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்    குறள் 96 

மகிழ்ச்சிதந்து நன்மையும் தரும் பயன்தருபவற்றை
பண்போடு பேசப்படும் சொல்
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்       குறள் 97

தீமைநீங்கிய இனியசொல் பிற்காலத்திலும்
இப்போதும் இனிமை தரும்
சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்     குறள் 98

இனியசொல் இன்பம்தருவதைக் காண்பவர் இப்படி
கடுமையான சொற்களைப் பேசுவரோ!
இன்சொல் இனிதுஈன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது        குறள் 99

இன்சொற்கள் இருக்க தீச்சொற்கள் பேசுவது
பழமிருக்க காயை சாப்பிடுவதுபோன்றது
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந்து அற்று      குறள் 10

செவ்வாய், 9 அக்டோபர், 2012

உளம் மகிழ்ந்து கொடுப்பதைவிட நல்லது மகிழ்ச்சியுடன் இனிதே பேசுவது


வீட்டிலிருந்து உபசரித்து வாழ்வதெல்லாம் விருந்தினரை உபசரித்து 
உதவிகளைச் செய்வதற் காகவே        பாமரன் பொருள்
இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம்விருந்தோம்பி
வேளாண்மை செய்தல் பொருட்டு.  குறள்- 81


இந்த அளவுதான் என்ற ஒன்று இல்லை விருந்தினரின்
தகுதியின் அளவே உபசரிப்பின் பயன்       பாமரன் பொருள்
இணைத்துணைத்து என்பதுஒன்று இல்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப்பயன்     குறள் 87


செல்வமிருந்தும் இல்லை எனும் நிலை விருந்து உபசரித்து போற்றா
மடமை அறிவில்லாதவரிடம் உண்டு         பாமரன் பொருள்
உடைமையுள் இன்மை விருந்துஓம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு      குறள் 89

முகர்ந்து பார்க்க வாடும் அனிச்சமலர் முகம் கோணி
பார்க்க வாடுவர் விருந்தினர்                 பாமரன் பொருள்
மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து       குறள் 90


இனிய சொல்லால் அன்புடன் பேசுபவர் கபடம் இருக்காது
அறப்பொருள் கண்டவர் வாய்ச்சொல்           பாமரன் பொருள்
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறு இலவாம்
செம்பொருள் கண்டார் வாய்ச்சொல்    91


உளம் மகிழ்ந்து கொடுப்பதைவிட நல்லது முகம் மகிழ்ந்து
இனிதே பேசுபவராக ஆதல்              பாமரன் பொருள்
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகன்அமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்  குறள் 92

முகம் மலரந்து இனிது நோக்கி மனதாலும்
இனிமையாகப் பேசுவதே அறம்        பாமரன் பொருள்
முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம் குறள் 93



வியாழன், 20 செப்டம்பர், 2012

விருந்தினர் வெளியே இருக்க தான் உண்பது அமிர்தம் என்றாலும் வேண்டாமே!

விருந்தினர் வெளியே இருக்க தான் உண்பது
அமிர்தம் என்றாலும் விரும்பத்தக்கதல்ல
விருந்து புறத்ததாத் தான்உண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற்று அன்று--- குறள் 82

வரும் விருந்தினரை தினமும் உபசரிப்பவன் வாழ்க்கை
எந்நாளும் வீழ்ச்சி அடைவதில்லை
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவத்து பாழ்படுதல் இன்று  ---குறள் 83

உள்ளத்தில் திருமகள் வசிப்பாள் முகமகிழ்வுடன்
நல்விருந்தினரை உபசரிப்பவர் வீட்டில்
அகன்அமர்ந்து செய்யாள் உறையும் முகன்அமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்----குறள் 84

நிலத்தில் விதை விதைக்கவும் வேண்டுமோ விருந்தினரை
உபசரித்து மீதத்தில் உண்பவன்.
வித்தும்இடல் வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சின் மிசைவான் புலம்---குறள் 85

செல்லும் விருந்தினரை உபசரித்து வருபவருக்காக காத்திருப்பவர்
தேவர்களுக்கு நல்ல விருந்தினராவார்
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு  ----குறள் 86

திங்கள், 10 செப்டம்பர், 2012

அன்போடு வாழவேண்டும்


அன்புடன் அமைந்த வாழ்க்கை என்பது உலகில்
இன்புற்றவர் அடையும் சிறப்பு-----பாமரன் பொருள்
அன்புற்று அமர்ந்த வழக்கு என்ப வையத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு----குறள் 75



எலும்பில்லா புழுவை வெயில் வாட்டுவது போல
அன்பில்லாதவர்களை அறம் வாட்டும்----பாமரன் பொருள்

என்பில் அதனை வெயில்போலக் காயுமே
அன்பில் அதனை அறம்------குறள் 77


உள்ளன்பு இல்லாது உயிர்வாழ்வது பாலைவனத்தில்
காய்ந்த மரம்துளிர்ப்பது போன்றது----பாமரன் பொருள்
அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரம் தளிர்த்தற்று-----குறள் 78

உடலுறுப்புகள் எல்லாம் என்னசெய்யும்
உள்ளத்தில் அன்பு இல்லாதவருக்கு------பாமரன் பொருள்
புறத்துறுப்பு எல்லாம் எவன் செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பில வர்க்கு------குறள் 79


அன்பின் வழி செல்லும் உயிர் அவ்வாறில்லாதவர்க்கு
எலும்புதோல் போர்த்திய உடம்பு-----பாமரன் பொருள்
அன்பின் வழியது உயிர் நிலை அஃதில்லார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு-----குறள் 80

திங்கள், 21 மே, 2012

அன்புடையவர் உடலையும் பிறருக்குத் தருவர்


அன்பினை அடைக்கும் தாழ்ப்பாள் உண்டோ அன்பர்
கண்ணீரே பலர் அறியச் செதுய்விடும்.  
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர்
புன்கண்ணீர் பூசல் தரும்        குறள் 71

அன்பில்லாதவர் எல்லாம் தமதென்பர் அன்புடையவர்
உடலையும் பிறருக்குத் தருவர்        
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு            குறள் 72

அன்போடு இணைந்த செயல் என்பது ஆருயிர்க்கு
உடம்போடு உள்ள தொடர்பு போன்றது    
அன்போடு இயைந்த வழக்கு என்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு         குறள் 73

அன்புடன் அமைந்த செயல் என்பது உலகில்
இன்புற்றவர் அடையும் சிறப்பு  
அன்புற்று அமைந்த வழக்கு என்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.        குறள் 74

அறத்திற்கே அன்பு துணை என்பர் அறியாதவர்
அறமில்லாத தீமையை எதிர்க்கவும் அதுவே துணை குறள் 75
அறத்திற்கே அன்பு சார்பு என்பர் அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.

ஞாயிறு, 20 மே, 2012

நன்மைதீமை வகைதெரிந்து துறவியானோர் பெருமையே உலகில் உயர்ந்த்து



நீரின்றி இல்லை உலக வாழ்க்கைஎனில் யாருக்கும்
மழையின்றி அமையாது ஓழுங்கு        பாமரன் பொருள் 
நீரின்றி அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்
வானின்று அமையாது ஓழுங்கு = குறள் 20


ஒழுக்கத்துடன் வாழ்ந்து துறவியானோர் பெருமை
அவர்களின் அறநூல்களால் உணரலாம்  பாமரன் பொருள்
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு      குறள் 21


துறவிகள் பெருமை அளந்து கூறினால் உலகில்
இறந்தோரை எண்ணிக் கூறுவது போன்றது  பாமரன் பொருள்
துறந்தார்  பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக் கொண்டற்று      குறள் 22



நன்மைதீமை வகைதெரிந்து துறவியானோர்
பெருமையே உலகில் உயர்ந்த்து      பாமரன் பொருள்
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு        குறள் 23


அறிவுஎன்னும் அங்குசத்தால் ஐம்புலன்களை அடக்கும் துறவி
துறவறம் என்னும் நிலத்திற்கு நல்விதை     பாமரன் பொருள்
உரன்என்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரன் என்னும் வைப்பிற்குஓர் வித்து    குறள் 24


ஐம்புலன்அடக்கிய ஞானியர் வல்லமைக்கு வானவர் தலைவனான
இந்திரனே பொருத்தமான சான்று     பாமரன் பொருள்
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலும் கரி          குறள் 25