ஞாயிறு, 20 மே, 2012

நன்மைதீமை வகைதெரிந்து துறவியானோர் பெருமையே உலகில் உயர்ந்த்து



நீரின்றி இல்லை உலக வாழ்க்கைஎனில் யாருக்கும்
மழையின்றி அமையாது ஓழுங்கு        பாமரன் பொருள் 
நீரின்றி அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்
வானின்று அமையாது ஓழுங்கு = குறள் 20


ஒழுக்கத்துடன் வாழ்ந்து துறவியானோர் பெருமை
அவர்களின் அறநூல்களால் உணரலாம்  பாமரன் பொருள்
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு      குறள் 21


துறவிகள் பெருமை அளந்து கூறினால் உலகில்
இறந்தோரை எண்ணிக் கூறுவது போன்றது  பாமரன் பொருள்
துறந்தார்  பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக் கொண்டற்று      குறள் 22



நன்மைதீமை வகைதெரிந்து துறவியானோர்
பெருமையே உலகில் உயர்ந்த்து      பாமரன் பொருள்
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு        குறள் 23


அறிவுஎன்னும் அங்குசத்தால் ஐம்புலன்களை அடக்கும் துறவி
துறவறம் என்னும் நிலத்திற்கு நல்விதை     பாமரன் பொருள்
உரன்என்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரன் என்னும் வைப்பிற்குஓர் வித்து    குறள் 24


ஐம்புலன்அடக்கிய ஞானியர் வல்லமைக்கு வானவர் தலைவனான
இந்திரனே பொருத்தமான சான்று     பாமரன் பொருள்
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலும் கரி          குறள் 25

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.