ஞாயிறு, 13 அக்டோபர், 2013

அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம்


திருக்குறள்  பொருட்பால்   அரசியல் 
அநிகாரம்;   அறிவுடைமை
குறள் 421 முதல் 425 வரை


அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்கல் ஆகா அரண்.    குறள் # 421
அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம் எதிர்ப்பவர்க்கும்
அழிக்க முடியாத உட்கோட்டை.   பாமரன் பொருள்.

.சென்ற இடத்தால் செலவிடாது தீதுஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு.   குறள் # 422.
சென்ற இடத்தில் செல்லவிடாமல் தீமையை விலக்கி
நல்வழியில் செல்லவைப்பது அறிவு.     பாமரன் பொருள்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.   குறள் # 423.
எக்கருத்தை யார்யார் சொல்லக் கேட்டாலும் அப்பொருளின்
உண்மைத்தன்மையை காண்பது அறிவு.     பாமரன் பொருள்.

எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்பது அறிவு.   குறள் # 424.
பிறர்மனதில் பதியுமாறு எளிதாகக் கூறி தான்பிறர் பேச்சின்
நுட்பமான பொருளை காண்பது அறிவு.    பாமரன் பொருள்.

உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு.     குறள் # 425
உலகத்து உயர்ந்தோரை நட்பாக்கிக் கொள்வது அறிவுடைமை அதனால் மலர்வதும்

வாடுவதும் இல்லாதது அறிவு.      பாமரன் பொருள்.

12 கருத்துகள்:

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

குறளும் விளக்கங்களும் அருமை. பாராட்டுக்கள். நன்றிகள்.

Unknown சொன்னது…

வை.கோபாலகிருஷ்ணன் said...
//குறளும் விளக்கங்களும் அருமை. பாராட்டுக்கள். நன்றிகள்//

தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இந்த அதிகாரத்தை ஒரு முக்கிய பதிவாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எழுதி வைத்துள்ளேன்...

குழந்தைகளின் படைப்புகள் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Sacrifice-Human-development.html

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம் எதிர்ப்பவர்க்கும்
அழிக்க முடியாத உட்கோட்டை

அருமை..பாராட்டுக்கள்..!

இளமதி சொன்னது…

உண்மைதான் ஐயா!.. எந்த வயதிலும் அறிவென்பது இல்லையாயின் எத்தனை இருந்தும் ஒன்றுமே இல்லாவதவனுக்குச் சமம்!..

சிறந்த கருத்துக்கள் ஐயா! வாழ்த்துக்கள்!

Unknown சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் said...
//இந்த அதிகாரத்தை ஒரு முக்கிய பதிவாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எழுதி வைத்துள்ளேன்//

தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி.. உங்கள் முக்கிய பதிவை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

Unknown சொன்னது…

இராஜராஜேஸ்வரி said...
அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம் எதிர்ப்பவர்க்கும்
அழிக்க முடியாத உட்கோட்டை
//அருமை..பாராட்டுக்கள்.//

தங்கள் வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி.

Unknown சொன்னது…

இளமதி said...
//உண்மைதான் ஐயா!.. எந்த வயதிலும் அறிவென்பது இல்லையாயின் எத்தனை இருந்தும் ஒன்றுமே இல்லாவதவனுக்குச் சமம்!..
சிறந்த கருத்துக்கள் ஐயா! வாழ்த்துக்கள்!'//

தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி

முற்றும் அறிந்த அதிரா சொன்னது…

//அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம்// தலைப்பே அருமை.... இது நிஜமேதான்ன்.... ஆனா சில வேளைகளில்.. அறிவும் மங்கி விடுகிறது... அதுதான் அழிவுக்கு காரணமாகி விடுகிறது.. அழகிய குறள்களும்.. அருமையான விளக்கங்களும்.

Unknown சொன்னது…

athira said...
//அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம்// தலைப்பே அருமை.... இது நிஜமேதான்ன்.... ஆனா சில வேளைகளில்.. அறிவும் மங்கி விடுகிறது... அதுதான் அழிவுக்கு காரணமாகி விடுகிறது.. அழகிய குறள்களும்.. அருமையான விளக்கங்களும்//
தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி

கோமதி அரசு சொன்னது…

அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம்//
உண்மை. அழிவை தடுக்கும் ஆயுதம் அறிவுதான். அருமையான குறள் விளக்கம்.

avainaayagan சொன்னது…

கோமதி அரசு said...
//அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம்//
உண்மை. அழிவை தடுக்கும் ஆயுதம் அறிவுதான். அருமையான குறள் விளக்கம்//

தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.