பொருட்பால்
அரசியல்
அதிகாரம் ; குற்றம் கடிதல்
குறள் 431 முதல் 435 வரை
செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து. குறள் #
431
கர்வமும் கோபமும் இழிவான நடத்தையும் இல்லாதவர்களுடைய
மேன்மை மதிக்கத்
தக்கது. பாமரன் பொருள்
இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு, குறள் # 432
பொருள் கொடாமையும் மாட்சியில்லாத
மானமும் தீயவற்றில்
மகிழ்வதும் தலைவருக்கு கேடாகும். . பாமரன் பொருள்
தினைத்துணையாங் குற்றம்
வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார். குறள் #
433
தினையளவே குற்றம் நேரினும்
அதை பனையளவு பெரிதாகக்
கருதுவர்
பழிபாவங்களுக்கு அஞ்சுபவர் பாமரன் பொருள்
குற்றமே காக்க பொருளாகக்
குற்றமே
அற்றந் தரூஉம் பகை. குறள் #
434.
குற்றம் வராமையை
குறிக்கோளாகக் கொள்க,
குற்றமே
அழிவைத்
தரும் பகையாகும். பாமரன் பொருள்
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும். குறள்
# 435
குற்றம் வரும் முன்பே வராமல் காத்துக் கொள்ளாதவன் வாழ்க்கை நெருப்புமுன்
வைக்கப்படும் வைக்கோல் போல அழியும். . . பாமரன் பொருள்