சனி, 5 அக்டோபர், 2013

அச்சமின்மை, ஈதல், அறிவுடைமை, ஊக்கமுடைமை நான்கும் தேவை ஆள்பவர்க்கு

பொருட்பால் அரசியல்
 இறைமாட்சி
குறள் 381 முதல் 385 வரை 


படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.     குறள் # 381
படை, மக்கள், செல்வம்,  நல்ஆலோசகர், நட்புநாடு, பாதுகாப்பு  ஆறும்
உடையவர் ஆட்சிசெய்பவர்களுள் சிறந்தவர்        பாமரன் பொருள்

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க்கு இயல்பு     குறள் # 382
அச்சமின்மை, ஈதல், அறிவுடைமை, ஊக்கம்உடைமை எனும் நான்கும்
எப்போதும் நீங்காமை ஆள்பவர்க்கு இயல்பானபண்பு       பாமரன் பொருள்

தூங்காமை கல்வி துணிவுஉடமை இம்மூன்றும்
நீங்கா நிலன்ஆள் பவர்க்கு     குறள் # 383
காலந்தாழ்த்தாமை கல்விதுணிவுடைமை ஆகியமூன்றும்
நீங்கக்கூடாது ஆட்சி நடத்துபவர்க்கு.          பாமரன் பொருள்

அறன்இழுக்காது அல்லவை நீக்கி மறன்இழுக்கா
மானம் உடையது அரசு    குறள் # 384
அறநெறிதவறாது தீயவை விலக்கி வீரம்குறையாது
மானத்துடன் நடப்பதே நல்ல ஆட்சி.      பாமரன் பொருள்

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு   குறள் # 385
வரும்வழிஉண்டாக்குதல் சேர்த்தல் காத்தல் பாதுகாத்தவற்றை
பிரித்துவழங்கல் ஆகியவை செய்யவல்லதே அரசு.    பாமரன் பொருள்

6 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அச்சமின்மை, ஈதல், அறிவுடைமை, ஊக்கம்உடைமை எனும் நான்கும்
எப்போதும் நீங்காமை ஆள்பவர்க்கு இயல்பானபண்பு

அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

Unknown சொன்னது…

இராஜராஜேஸ்வரி said...
"அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்"

தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி..

இளமதி சொன்னது…

மிக அருமையான இலகுவான பொருள் கண்டேன்!
வாழ்த்துக்கள் ஐயா!

Unknown சொன்னது…

இளமதி said...
//மிக அருமையான இலகுவான பொருள் கண்டேன்!
வாழ்த்துக்கள் ஐயா!//

தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் வாழ்த்துக்கும் நன்றி

கோமதி அரசு சொன்னது…

அச்சமின்மை, ஈதல், அறிவுடைமை, ஊக்கம்உடைமை எனும் நான்கும்
எப்போதும் நீங்காமை ஆள்பவர்க்கு இயல்பானபண்பு //
ஆம், உண்மை.
அருமையான விளக்கம்.

Unknown சொன்னது…

கோமதி அரசு said...
//ஆம், உண்மை.
அருமையான விளக்கம்.//
தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.