வியாழன், 25 டிசம்பர், 2014
திங்கள், 22 டிசம்பர், 2014
சோம்பலுடையவர் சிறந்த பயனை அடைய முடியாது.
பொருட்பால் அரசியல் மடியின்மை (சோம்பல் இல்லாதிருத்தல்) 601--610
குடியென்னும் குன்றா
விளக்கம் மடியென்னும்
மாசுஊர மாய்ந்து
கெடும். குறள் # 601
குடிஎன்னும் அணையாத
விளக்கானாலும் சோம்பல் எனும்
மாசுபடிய மங்கி
மறையும். பாமரன் பொருள்.
மடியை மடியா ஒழுகல்
குடியைக்
குடியாக வேண்டு
பவர். குறள் # 602
சோம்பலை விடுத்து வாழ்தல்
வேண்டும் தன்குடியை
நற்குடியாக உயர்த்த
விரும்புபவர். பாமரன் பொருள்
மடிமடிக் கொண்டொழுகும்
பேதை பிறந்த
குடிமடியும் தன்னிலும்
முந்து. குறள் # 503
சோம்பலைப் பழக்கமாக்கி
வாழும் அறிவில்லாதவன் பிறந்த
குடும்பம் அவனுக்கு
முன்பே அழியும். பாமரன் பொருள்
குடிமடிந்து குற்றம்
பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி
லவர்க்கு. குறள் # 604
குடும்பப் பெருமை அழிந்து
குற்றமும் பெருகும் சோம்பலில் வீ..ழ்ந்து
சிறந்த முயற்சி
செய்யாதவருக்கு. பாமரன் பொருள்
நெடுநீர் மறவி மடிதுயில்
நான்கும்
கெடுநீரார் காமக்
கலன். குறள் # 605
காலம் தாழ்த்துதல் மறதி
சோம்பல் அதிகதூக்கம் எனும் நான்கும்--
கெடுகெடுகின்ற ஒருவர் விரும்பி
ஏறும் வாகனமாகும். பாமரன் பொருள்
படியுடையார் பற்றமைந்தக்
கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல்
அரிது. குறள் # 606
ஆள்பவர் செல்வமெல்லாம்
சேர்ந்த போதிலும் சோம்பலுடையவர்
சிறந்த பயனை அடைய
முடியாது. பாமரன் பொருள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)