சனி, 7 ஏப்ரல், 2012

மழலைக் கேட்பது செவிக்கு இன்பம்/

பெறுபவற்றுள் சிறந்தது ஏதுமில்லை அறிவுடைய

குழந்தைகள் தவிர வேறல்ல            பாமரன் பொருள்

 பெறுமவற்றுள் யாமஅறிவ தில்லை அறிவறிந்த

மக்கட்பேறு அல்ல பிற      குறள்  61


ஏழுபிறப்பிலும் தீமை வராது குற்றமற்ற
பண்புடைய குழந்தைகள் பெற்றால்        பாமரன் பொருள்
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்  குறள்  62


நம்செல்வம் என்பது குழந்தைகளே அச்செல்வம்
தம்வினையால் வருவது ஆகும்             பாமரன் பொருள்

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்  குறள் 63


அமிர்தத்தையும் விடஇனியது தம்குழந்தை
சிறுபிஞ்சுகை துளாவிய கூழ்              பாமரன் பொருள்

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்,             குறள்  64


குழந்தைகளை தொட்டுத்தூக்குவது உடலுக்கின்பம் அவர்கள்
மழலைக் கேட்பது செவிக்கு இன்பம்/          பாமரன் பொருள்

மக்கள் மெய்தீண்டல் உடற்குஇன்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு       குறள் 65