திருக்குறள்
பொருட்பால்
அரசியல்
அதிகாரம் சுற்றந்தழால்
பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள. குறள் # 521
வறியவனான நேரத்திலும் பழையஉறவைப் பாராட்டும்
பண்பு
உறவினர்களிடம் மட்டுமே உண்டு. பாமரன்
பொருள்.
விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும் தரும் குறள் # 522
அன்பு நீங்காத உறவினர் ஒருவனுக்குக் கிடைத்தால்
வளர்ச்சி குறையாத
மேன்மைகள் பலவும் தரும். பாமரன்
பொருள்.