வியாழன், 1 செப்டம்பர், 2016

போரிடும் திறன் இல்லாதவரிடம் இருந்தால் அரண் இல்லாததாகவே ஆகும்


போரிடும் திறன்  இல்லாதவரிடம் இருந்தால் அரண் இல்லாததாகவே ஆகும் 


பொருட்பால்    அரணியல்    அரண் 

குறள் எண்   741 முதல்  750 வரை

ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்      குறள் 741 
போர்செய்யச் செல்பவர்க்கும் அரண் சிறந்தது பயந்து
உள்ளே இருப்பவருக்கும் அதுவே சிறந்தது        பாமரன் பொருள்

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்           குறள் 742
தெளிந்த நீர் வெட்ட வெளிநிலம் மலை காடு என
நான்கும் உள்ளதே அரண்           பாமரன் பொருள்