நெடுங்கடலும் தன்நீர்வளம் குறையும் ஆவியான கடல்நீர்
மழையாகப் பெய்யா விட்டால் பாமரன் குறள்
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின் குறள் -17
சிறப்பாக பூஜைகள் நடவாது, வானம் பெய்யாது
போனால், வானத்தவர்க்கு விழாக்கள் இராது. பாமரன் குறள்
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு குறள் -18
தானம், தவம் இரண்டும் நடவாது பேருலகில்
வானம் மழை பெய்யா தெனின் பாமரன் குறள்
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின் குறள் -19