செவ்வாய், 12 நவம்பர், 2013

நன்மைதராத செயல் செய்வதை விரும்பாதீர்

பொருட்பால், அரசியல்.
அதிகாரம்; குற்றங்கடிதல்
குறள் 436 முதல் 440 வரை
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு.        குறள் # 436
தனதுகுற்றத்தை நீக்கி பிறரது குற்றத்தைக் காணமுற்பட்டால்
என்ன குற்றம் நேரும் தலைவனுக்கு.     பாமரன் குறள்

செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்.         குறள் # 437
செய்ய வேண்டியவற்றை செய்யாத கருமியின் செல்வம்
பயன் ஏதுமின்றி வீணாகும்.     பாமரன் பொருள்.

பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப்படுவதொன் றன்று.      குறள்  # 438.
கருமித்தனத்தால் கொடுக்காத த்ன்மை எல்லாகுற்றங்களுள்ளும்
ஒன்றாக எண்ணப்படக்கூடியதல்ல. (மிக மோசமானது).   பாமரன் பொருள்.
.
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.     குறள் # 439
எப்பொழுதும் தன்னைத்தான் வியந்துபேசாதீர், விரும்பாதீர்
நன்மைதராத செயல் செய்வதை.    பாமரன் பொருள்.

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.        குறள் # 440
விரும்பியவற்றை பிறர் அறியாமல் நிறைவேற்றினால்

பலிக்காது பகைவரின் சூழ்ச்சிகள்.     பாமரன் பொருள்.