புதன், 9 டிசம்பர், 2015
புதன், 11 நவம்பர், 2015
காக்க விரும்பினால் அரியதவறு நேராது காக்கவும்
காக்க விரும்பினால் அரியதவறு நேராது காக்கவும்
அகலாது அணுகாது தீக்காய்வார்
போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொ.ழுகு
வார் குறள்
# 691
அதிகம் நீங்காதும் அதிகம் நெருங்காதும் தீயில் குளிர்காய்வது போல்
இருப்பர்
அரசைச் சார்ந்து வாழ்பவர்.
பாமரன் பொருள்
செவ்வாய், 27 அக்டோபர், 2015
தனக்கு அழிவைத் தருவதாயினும் அஞ்சாது பணியாற்றுபவரே நல்ல தூதர்
பொருட்பால் அமைச்சியல் தூது
681 முதல் 690 வரை
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு குறள் # 681
அன்புள்ளவராதல் நல்ல குடிப்பிறப்பு
அரசுவிரும்பும்
நற்பண்பு உள்ளவராதல் தூதருக்கான
தகுதி பாமரன்
பொருள்
அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை
தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று குறள்
# 682
அன்பு அறிவு ஆராய்ந்து
பேசும் சொல்திறமை தூதருக்கு
தேவையான முக்கிய மூன்று
பண்புகள் பாமரன்
பொருள்
ஞாயிறு, 21 ஜூன், 2015
காலந்தாழ்த்தாது செய்யவேண்டியவற்றை தாமதியாமல் செய்க
பொருட்பால் அமைச்சியல் வினைசெயல்வகை
குறள் 671 முதல் 680 வரை.
சூழ்ச்சி முடிவு துணிவுஎய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது.
குறள் 671
ஆராய்தலின் முடிவு செய்யும் துணிவுபெறல் அத்துணிவை செயல்படுத்த
காலந்தாழ்த்துதல் தீங்கானது.
பாமரன் பொருள்
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.
குறள் 672
மெதுவாகச் செய்யக் கூடியவற்றை தாமதித்துச்
செய்யலாம், தாமதிக்கக்காதீர்
காலந்தாழ்த்தாது செய்ய வேண்டிய வேலைகளை. பாமரன் பொருள்
புதன், 29 ஏப்ரல், 2015
சொல்வது எல்லோருக்கும் சுலபம்
பொருட்பால் அமைச்சியல் வினைத்திட்பம்
குறள் எண் 661 முதல் 670
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற
குறள் 661
செயலில் உறுதி என்பது ஒருவரின் மனஉறுதியே
மற்றவை எல்லாம் வேறு.
பாமரன் பொருள்.
ஊறுஒரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறுஎன்பர் ஆய்ந்தவர் கோள்.
குறள் 662
இடையூறை நீக்குதல் அதுவந்தால் மனம் தளராமை இவ்விரண்டும்
வழிஎன்பது ஆராய்தறிந்தவரின் கொள்கை. பாமரன்
பொருள்.
கடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமம் தரும்.
குறள் 663
செயல்முடிவில் தெரியும்படி செய்யும்தகுதியே ஆளுமை இடையில் தெரிந்தால்
நீங்காத துன்பத்தைத் தரும். பாமரன் பொருள்.
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.
குறள் 664
சொல்லுவது எல்லோருக்கும் எளிது, கடினம்
சொல்லிய படி அதைச் செய்தல். பாமரன்
பொருள்.
ஞாயிறு, 29 மார்ச், 2015
துன்பம் ஏற்பட்டாலும் இழிவான செயல் செய்யமாட்டார் தெளிந்த அறிவுடையவர்
பொருட்பால்
அமைச்சியல்
வினைத்தூய்மை
குறள் 651 முதல் 660 வரை
துணைநலம் ஆக்கம் தருஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும் குறள்
# 651
ஒருவருக்கு நல்லதுணை வலிமையைத் தரும் நற்செயல்
விரும்பிய எல்லாம் தரும்.
பாமரன் பொருள்
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை. குறள்
# 652
என்றும் விட்டொழிக்க வேண்டும், புகழையும்
நன்மையையும் தராத செயல்களை.
பாமரன் பொருள்
ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு பவர்.
குறள் # 653
மேன்மையை அழிக்கும் செயலை விட வேண்டும் செயலில்
மென்மேலும் உயர முயல்பவர் பாமரன்
பொருள்
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்.
குறள் # 654
வியாழன், 12 மார்ச், 2015
பேச்சில் தவறு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
பொருட்பால் அமைச்சியல்
சொல்வன்மை குறள் 641 முதல் 650
வரை
நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று. குறள் 641
நாவன்மை ஒருவகைச் செல்வம் அந்த
தனிச்சிறப்புடைய நாநலம்
எந்த நலங்களிலும் அடங்குவது அன்று பாமரன் பொருள்
ஆக்கமும் கேடும் அதனால் வருதலான்
காத்தோம்பல் சொல்லின்கண்
சோர்வு. குறள் # 642
நன்மையும் கேடும் சொல்லால் வருவதால்
பேச்சில் தவறு வராமல் காத்துக்கொள்ள
வேண்டும். பாமரன் பொருள்
வியாழன், 29 ஜனவரி, 2015
துன்பத்திற்கே துன்பம் தருவர், துன்பத்திற்கு வருந்தி கலங்காதவர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)