ஞாயிறு, 23 டிசம்பர், 2012

எல்லோருக்கும் நல்லது பணிவு


எல்லோருக்கும் நல்லது பணிவு

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆ,ரிருள் உய்த்து விடும்   குறள்  121
அடக்கம் தேவருலகிற்கு அனுப்பும் அடங்காமை
துன்பத்தில் தள்ளி விடும்      -- பாமரன் பொருள்

காக்கப் பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனின்ஊங்கு இல்லை உயிர்க்கு.  குறள்  122
அடக்கத்தை செல்வமாக காக்கவும், அதனைவிட
சிறந்த செல்வம் இல்லை மனிதருக்கு. --  பாமரன் பொருள்.

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெரின்.    குறள் 123
செறிவறிந்து மேன்மை தரும் நல்அறிவுடன்
நடந்து அடக்கமாக வாழ்ந்தால்.  -- பாமரன் பொருள்.

நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.      குறள் 124.
ஒழுக்க நெறியில் மாறாத அடக்கமானவன் தோற்றம்
மலையைவிட மிகப் பெரியது.  -- பாமரன் பொருள்.

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.   குறள்  125.
எல்லோருக்கும் நல்லது பணிதல் அவருள்ளும்
செல்வந்தருக்கோ அது செல்வம் போன்றது.  -- பாமரன் பொருள்.

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து.  குறள் 126
வாழ்க்கையில் ஆமைபோல் ஐம்புலன்களை அடக்கினால்
எப்பொழுதும் மேன்மை தரும்.    -- பாமரன் பொருள்

யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பார் சொல்இழுக்குப் பட்டு     குறள் 127.
எதைக் காக்காவிடினும் நாவைஅடக்குக அடக்காவிடில்
சோகப்படுவர் சொற்குற்றம் ஏற்பட்டு. – பாமரன் பொருள்.

ஒன்றாயினும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகாது ஆகி விடும்.   குறள் 128.
ஒன்றேஎனினும் தீயசொல் பயனுள்ள பேச்சையும்
தீயதாக ஆக்கி விடும்.  --பாமரன் பொருள். 

தீயினால் சுட்டபுண் உள்ஆறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.       குறள் 129
தீயினால் ஏற்பட்டபுண் முழுதும் ஆறிவிடும் ஆறாது
கடுஞ்சொல்லால் ஏற்பட்ட புண். --பாமரன் பொருள்.

கதம்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து  குறள் 130
கோபத்தையடக்கி கற்றுஅடக்கத்தோடு வாழ்பவனை
அறம் எப்பொழுதும் காக்கும். -- பாமரன் பொருள். .  .  

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

தராசுபோல் நடுநிலையோடு செயல்பட வேண்டும்


செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி
எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து     குறள் 112
நடுநிலை உடையவர் செல்வம் அழியாமல்
அவர் தலைமுறைக்கும பயன்படும்.   பாமரன் பொருள்

நன்றேதரினும் நடுவுஇகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல்.      குறள் 113
நல்லதே தந்தாலும் நடுநிலைதவறி வரும் செல்வத்தை
அன்றே விடவேண்டும்                பாமரன் பொருள்

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்.        குறள்  114
நடுநிலையாளரா இல்லையா என்பது அவரது
புகழாலும் பழியாலும் உணரலாம்       பாமரன்  பொருள்.

கேடும் பெருக்கமும் இல்அல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க்கு அணி   குறள்   115
தாழ்வும் உயர்வும் வரும் போகும் மனதில்
நடுநிலை தவறாமை சான்றோர்க்கு அழகு     பாமரன் பொருள்

கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுஒரீஇ அல்ல செயின்       குறள் 116
கெட்டுவிடுவேன் நான் என்று உணர்க தான்
நடுநிலை தவறி செய்தால்     பாமரன குறள்

கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு     குறள்  117
தாழ்ந்ததாகக் கருதாது உலகம் நேர்மையாக
நடுநிலையில் செயல்பட்டு தாழ்ந்தாலும்     பாமரன் பொருள்.

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி     குறள் 118
சமமாகநின்று எடைகாட்டும் தராசுபோல் இருந்து ஒருபக்கம்
சாயாதிருத்தல் சான்றோர்க்கு அழகு      பாமரன் பொருள்.

சொற்கோட்டம் இல்லாது செப்பம் ஒருதலையா
உள்கோட்டம் இன்மை பெறின்     குறள்  119.
சொல்தடுமாற்றம் இராது நடுநிலையுடன் ஒருபக்கமாகும்
மனத்தடுமாற்றம் இல்லையெனில்.     பாமரன் பொருள்.

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்.       குறள்   120
வியாபாரம் செய்பவருக்கு வியாபாரத்தில் பிறர் பொருளையும்
தமதுபோல எண்ணி செய்வதே நல்லது.  பாமரன் பொருள்