ஞாயிறு, 29 ஜனவரி, 2012

அறவழியில் வருவதே இன்பம்


முதுமையில் செய்யலாமென எண்ணாதுஅறம் செய்க அதுவே
இறுதிக் காலத்தில் துணையாகும்        பாமரன் குறள்
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை               குறள் 36

அறத்தின் பயன் இதுவென கூறவேண்டாம் பல்லக்கில்
பயணிப்பவன் தூக்குபவன் இடையில்                    பாமரன் குறள்
அறத்தாறு இதுஎன வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை                   குறள் 37

நாள் தவறாமல் அறம் செய்தால் அதுவே
பிறவியைத்  தடுக்கும் கல்                             பாமரன் குறள்
வீழ்நாள் படாஅமை  நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள்  வழியடைக்கும் கல்                           குறள் 38

அறவழியில் வருவதே இன்பம் வேறுவழி வருபவை
இன்பமுமில்லை புகழுமில்லை                பாமரன்   குறள்     அறத்தான் வருவதே இன்பம்மற்று எல்லாம்
புறத்த புகழும் இல                                     குறள்   39    

செய்யவேண்டியவை எல்லாம் அறனே ஒருவருக்கு
செய்யக்கூடாதவை பழிதரும் பாவச்செயல்         பாமரன் குறள்
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி                            குறள் 40

ஞாயிறு, 22 ஜனவரி, 2012

சிறப்பையும், செல்வத்தையும் தரும் அறம்



சிறப்பைத்தரும் செல்வமும் தரும் அறத்தைவிட
சிறந்தது ஏதும் இல்லை                             பாமரன் குறள்         

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு                                குறள் 31

அறத்தைவிட சிறந்த சக்தியும் இல்லை அதனை
மறப்பதற்கு சமமான கேடும் இல்லை                 பாமரன் குறள்                     

அறத்தினூங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்குஇல்லை கேடு                          குறள்  32  

மனதளவில் குற்றமில்லாமல் இருப்பதே அறமாகும்
மற்றவையோ வெறும் ஆரவாரங்களே                பாமரன் குறள்                        

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற                                           குறள் 34

பொறாமை பேராசை கோபம் கடுஞ்சொல் இந்நான்கும்
iஇல்லாது வாழ்வதே அறமாகும்                       பாமரன் குறள்   

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்                                  குறள் 35                    


சனி, 14 ஜனவரி, 2012

செய்ய வேண்டியவை செய்யாததால் கேடு வரும்


செயத்தக்க அல்ல செயக்கெடும் செயத்தக்க
செய்யாமை யாலும் கெடும்                குறள்  466

செய்யக் கூடாதது செய்ய கெடும் செய்ய வேண்டியவை
செய்யாத தாலும் கெடும்                     பாமரன் குறள்


அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல்
நல் வாழ்த்துக்கள்

என் வலைப்பதிவை ஆரம்பித்து ஒருவருடத்துக்கு மேலாகியும் பலரது பார்வையில் படாமலே இருந்துவந்தது. சிலமாதங்கள் முன்பு தான் ஒரு நண்பர் மூலமாக வலைப்பதிவு திரட்டிகள் பற்றி கேள்விப் பட்டேன். அவற்றில் பதிவு செய்த சில மாதங்களிலேயே ஆயிரம் பேருக்குமேல் என் எழுத்துக்களைப் படித்திருக்கிறார்கள் என்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

வலைப்பதிவைப் படித்துச் செல்லும் சக பதிவர்களின் கருத்துக்களும், ஆலோசனைகளும் ஊக்குவிப்பும் என்னை மேலும் மேலும் எழுதத்தூண்டுகின்றன. என் எழுத்துக்களைப் படித்தவர்கள், பின்னூட்டமிட்டவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி யை தெரிவித்துக்கொள்கிறேன். எப்பொழுதும் உங்கள் கருத்துக் களையும் ஆலோசனைகளையும் பெரிதும் மதிக்கிறேன்,

 

நன்றி   நன்றி  நன்றி


இப்படிக்கு
வியபதி, அவை நாயகன்

ஞாயிறு, 8 ஜனவரி, 2012

துறவியர் பெருமை


சுவை வெளிச்சம் (தொடு)உணர்வு ஓசை வாசனை இவ்வைந்தின்
வகைதெரிந்த துறவியர் பின்னே உலகம்       பாமரன் குறள்

சுவைஒளி ஊறுஓசை நாற்றம் என்ற ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு                         குறள் 27
                         
மெய்ப்பொருள் அறிந்த துறவியர் பெருமை உலகில்
அவர்களின் நூல்கள் காட்டும்                       பாமரன் குறள்

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்                        குறள் 28

பண்புகள் நிறைந்த துறவியரின் கோபம்
கணநேரமும் நிலைத்து இருக்காது                   பாமரன் குறள்

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல்  அரிது                             குறள் 29