வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

வருவாய் குறைவாக இருந்தாலும் தீங்கு இல்லை

                                                             பொருட்பால்
        அரசியல்
அதிகாரம்; வலியறிதல்
குறள் 471 முதல் 480 வரை



வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்    குறள் # 471
செயலின்வலிமையும் தனதுவலிமையும் பகைவரின் வலிமையும்இருவரது
துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செய்க.      பாமரன் பொருள்

ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்கு செல்லாதது இல்     குறள் # 472.
தம்மால் முடியும்செயல் அறிந்து அதைச்செய்வதற்கான வழியை சிந்தித்து
முயல்பவருக்கு முடியாதது ஏதுமில்லை                    jqபாமரன் பொருள்

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.    குறள் # 473
தன்னுடைய ஆற்றலை அறியாமல் ஆர்வத்தினால் தொடங்கி
இடையில் முடிக்க முடியாது கெட்டவர் பலர்.      பாமரன் பொருள்

அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.   குறள் # 474
மற்றவர்களோடு ஒத்துப்போகாமல் தன்வலிமையையும் அறியாமல் தன்னைப்
பெரிதாக எண்ணுபவன் விரைவில் கெடுவான்.       பாமரன் பொருள்

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின் குறள் # 475
மயில்தோகையேயானாலும் வண்டியின் அச்சு முறியும் அதனை
அளவிற்கு அதிகமாக வண்டியில் ஏற்றினால்.               பாமரன் பொருள்

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்     குறள் # 476 
மரத்தின் கிளைநுனியில் ஏறியவர் அதையும்தாண்டி செல்லமுயன்றால்
அம்முயற்சி அவர் உயிருக்கு முடிவாகி விடும்        பாமரன் பொருள்

ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி.     குறள் # 477
வருவாயின் அளவையறிந்து தருக, அதுவே பொருளைக்
காத்துக்கொண்டு தரும் வழியாகும்.           பாமரன் பொருள்

ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை.       குறள் #478
வருவாய் குறைவாக இருந்தாலும் தீங்கு இல்லை
செலவு அதிகமாகாமல் இருந்தால்.           பாமரன் பொருள்

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.
பொருளின் அளவறிந்து வாழாதவனின் வாழ்க்கை வளமானதாகத் தோன்றி
இல்லாமல் அழிந்து விடும்                           பாமரன் பொருள்

உளவரை தூக்காத ஒப்புர வாண்மை 
வளவரை வல்லைக் கெடும்   குறள் # 480
பொருள் உள்ள அளவை ஆராயாது செய்யும் உதவிகளால்

செல்வத்தின் அளவு விரைவில் குறையும்.            பாமரன் பொருள்    

சனி, 1 பிப்ரவரி, 2014

செய்யவேண்டியவை செய்யாததாலும் கெட்டுப் போவான்.


பொருட்பால்
அரசியல்
அதிகாரம்; தெரிந்து செயல்வகை
குறள் 461 முதல் 470 வரை

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்நு செயல்       குறள் # 461
செலவையும் வரும் வருவாயையும் அதன்வழிவரும்
லாபத்தையும் ஆராய்ந்து செயலைச் செய்க.        பாமரன் பொருள்

தெரிந்த இனத்தோடு தேர்ந்துஎண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதுஒன்றும் இல்  குறள் # 462
தேர்ந்தெடுத்த நண்பர்களுடன் ஆராய்ந்து யோசித்து செய்பவர்களுக்கு
செய்யமுடியாத செயல் ஒன்று இல்லை         பாமரன் பொருள்

ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்     குறள் #463
லாபம் கிடைக்குமென எண்ணி முதலைஇழக்கும் செயல்களை
ஆதரிக்கமாட்டார்கள் அறிவுடையோர்.        பாமரன் பொருள்

தெளிவுஇல் அதனைத் தொடங்கார் இளிவுஎன்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர்       குறள் # 464
என்னவாகும்எனும் தெளிவில்லா செயலை துவங்கமாட்டார்கள் இழிவான
நிலைக்கு பயப்படு பவர்கள்          பாமரன் பொருள்

வகையறச் சூழாது எழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோர் ஆறு     குறள் # 465
செயலின் வகைகளை ஆராயாமல் செய்யத் தொடங்குதல் பகைவரை
வலிமையாக நிலைபெறச் செய்யும் ஒரு வழி.        பாமரன் பொருள்

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்   குறள் #466
செய்யக்கூடாதவை செய்வதால் கெடுவான் செய்யவேண்டியவை
செய்யாததாலும் கெட்டுப் போவான்.      பாமரன் பொருள்

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.      குறள் # 667
யோசித்து செயலில் இறங்குக துவங்கியபிறகு
யோசிப்போம் என்பது குற்றமாகும்..        பாமரன் பொருள்

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்   குறள் # 468
முறையாக செய்யப்படாது முயற்சித்த காரியம் பலர்முயன்று
காத்த போதிலும் கெட்டுப் போகும்         பாமரன் பொருள்

நன்றுஆற்றல் உள்ளும் தவறுஉண்டு அவர்அவர்
பண்புஅறிந்து ஆற்றாக் கடை    குறள் #469
நன்மை செய்வதிலும் தவறு உண்டு அவரவர்களுடைய
பண்பை அறிந்து பொருத்தமாக செய்யாவிட்டால்.      பாமரன் பொருள்

எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு
கொள்ளாத கொள்ளாது உலகு.    குறள் # 470
உலகுஇகழாதவற்றை யோசித்துச் செய்யவேண்டும். தம்நிலையோடு

பொருந்தாததை ஏற்றுக்கொள்ளாது உலகம்.       பாமரன் பொருள்.

சனி, 18 ஜனவரி, 2014

நல்லஇனத்தைவிட சிறந்த துணை இல்லை

பொருட்பால்
அரசியல்
அதிகாரம் : சிற்றினஞ்சேராமை

குறள் 356 முதல் 360 வரை

மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை.   குறள் # 456
மனந்தூய்மையானவர்க்கு எஞ்சுவது புகழ்போன்ற நன்மை இனந்தூய்மையானவர்க்கு
நன்றாகாத செயல் ஏதும் இல்லை        பாமரன் பொருள்

மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்.   குறள் # 457
மனநலம் உயிர்களுக்கு மேன்மையாகும் இனநலம்
எல்லாப் புகழையும் தரும்.      பாமரன் பொருள்

மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு     
இனநலம் ஏமாப் புடைத்து.  குறள் # 458
மனநலம் நன்றாக அமையப்பெற்றவராயினும் சான்றோருக்கு
இனத்தின் நன்மை பாதுகாப்பாக அமையும்.      பாமரன் பொருள்

மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து  குறள் # 459
மனத்தின் நன்மையால் மறுமை இன்பமுடையதாகும் அதுவும்
இனநலத்தால் மேலும் சிறப்புடையதாகும்        பாமரன் பொருள்

நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்     குறள் # 460
நல்லஇனத்தைவிட சிறந்த துணையுமில்லை.தீய இனத்தைவிட
துன்பம் தரும்பகையும் இல்லை          பாமரன் பொருள்


திங்கள், 13 ஜனவரி, 2014

பொங்கல் மற்றும் உழவர்திருநாள் வாழ்த்துக்கள்

பொங்கல் வாழ்த்துக்கள்




அனைவருக்கும் பொங்கல் மற்றும் உழவர்திருநாள் வாழ்த்துக்கள்


பொருட்பால்
அரசியல்
அதிகாரம் - சிற்றினம் சேராமை
குறள் 451 முதல் 455 வரை
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்   குறள் # 451
பெரியோர் கீழ்மக்களோடு சேர அஞ்சுவர். சிறியவர்கர்கள்தான்
அத்தகு கீழ்மக்களையே உறவாகக் கருதுவார்கள்.     பாமரன் பொருள்

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்பது ஆகும் அறிவு.   குறள் # 452
இருக்கும் நிலத்தின் தன்மையை நீர் அடைவதைப் போன்றது மக்களின் அறிவும் அவர்சார்ந்த இனத்தின் இயல்பாக ஆகிவிடும்.   பாமரன் பொருள்

மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படுஞ் சொல்.. குறள் # 453
மனத்தால் இயற்கையறிவு மக்களுக்கு ஏற்படும். சார்ந்தஇனத்தால்
இப்படிப் பட்டவன். எனும் சொல் உண்டாகும்.  .     பாமரன் பொருள்

மனத்துஉளது போலக் காட்டி ஒருவற்கு
இனத்துஉளது ஆகும் அறிவு,       குறள் # 454
ஒருவரின் இயல்பு அவரது மனதால் உண்டாவதுபோல தெரிந்தாலும்
அவர் சார்ந்த இனத்தால் வெளிப்படுவதே ஆகும்.  .     பாமரன் பொருள்

மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்..    குறள் # 455
மனத்தின்தூய்மை செய்யும் செயலின்தூய்மை இரண்டும்
சேர்ந்த இனத்தின் தூய்மையைக் கொண்டே ஏற்படும். .   பாமரன் பொருள்


வெள்ளி, 3 ஜனவரி, 2014

நல்லவரின் தொடர்பைக் கைவிடுவது தீமையானது.

அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்





நல்லவரின் தொடர்பைக் கைவிடுவது தீமையானது.


தக்கார் இனத்தனாய்த் தான்ஒழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்தது இல். குறள் # 446
தகுதிமிக்க பெரியவர்களுடன் நட்பாகப்பழக வல்லவனுக்கு
பகைவர்கள் செய்யக்கூடிய தீங்கு ஏதுமில்லை.     பாமரன் பொருள்

இடிக்கும் துணையாரை ஆள்வரை யாரே
கெடுக்கும் தகைமை யவர்  குறள் # 447
தவறைச் சுட்டிக்காட்டுபவரை துணையாகக் கொள்பவரை யார்தான்
கெடுக்கும் ஆற்றல் உள்ளவர்.                 பாமரன் பொருள்


இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்    குறள் @ 448
தீயவற்றைச்சுட்டிக் காட்ட யாருமில்லா தலைவன்
பகைவர் இல்லாவிடினும் கெடுவான்.             பாமரன் பொருள்


முதல்இலார்க்கு ஊதியம் இல்லை மதலையாம்
சார்புஇலார்க்கு இல்லை நிலை     குறள் # 449
முதலில்லா வணிகருக்கு லாபம்இல்லாதது போல் தாங்கும் தூண்போன்ற
துணையில்லாதவருக்கு நல்ல நிலையும் இல்லை.      பாமரன் பொருள்


பல்லார் பகைகொளலின் பத்துஅடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.      குறள் # 450
பலரோடு பகைகொள்வதைவிட பத்துமடங்கு தீமையானது
நல்லவரின் தொடர்பைக் கைவிடுவது.                    பாமரன் பொருள்

சனி, 21 டிசம்பர், 2013

பெரியவர்களை சுற்றத்தாராகக் கொள்வது பேறுகளுள் சிறந்தது


பொருட்பால்
அரசியல்
அதிகாரம்- பெரியாரைத் துணைகோடல்
குறள் 441 முதல் 445 வரை.


அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.       குறள் 441
அறம் உணர்ந்த மூத்த அறிவுடையவரின் நட்பை
பெறும் வகையை ஆராய்ந்தறிந்து பெறுக.   பாமரன் பொருள்.

உற்ற நோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.     குறள்  442
வந்த துன்பத்தைப் போக்கி அது திரும்பவராது முன்காக்கும்
தன்மையுடையவரைப் போற்றி துணையாகப் பெறுக.   பாமரன் பொருள்.

அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.    குறள் # 443
அரியபேறுகளுள் எல்லாம் அருமையானது பெரியவர்களைப்
போற்றி சுற்றத்தாராக ஆக்கிக் கொள்வது.    பாமரன் பொருள்.

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாம் தலை.  குறள் # 444
தம்மைவிட அறிவில்சிறந்தவரை சுற்றத்தாராகும்படி நடத்தல்
வல்லமையுள் எல்லாம் முதன்மையானது..    பாமரன் பொருள்.

சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.    குறள் # 445
உடனுள்ள அறிஞர்களைக் கண்ணாகக் கொண்டு நடத்தலால் தலைவன்
அறிஞர்களை துணையாகக் கொள்ள வேண்டும்   பாமரன் பொருள்.