பொருட்பால்
அரசியல்
அதிகாரம் : சிற்றினஞ்சேராமை
குறள் 356 முதல் 360 வரை
மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை.
குறள் # 456
மனந்தூய்மையானவர்க்கு எஞ்சுவது புகழ்போன்ற நன்மை
இனந்தூய்மையானவர்க்கு
நன்றாகாத செயல் ஏதும் இல்லை பாமரன் பொருள்
மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும். குறள் # 457
மனநலம் உயிர்களுக்கு மேன்மையாகும் இனநலம்
எல்லாப் புகழையும் தரும். பாமரன் பொருள்
மனநலம் நன்குடைய ராயினும்
சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து. குறள் # 458
மனநலம் நன்றாக அமையப்பெற்றவராயினும்
சான்றோருக்கு
இனத்தின் நன்மை பாதுகாப்பாக அமையும். பாமரன் பொருள்
மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து குறள் # 459
மனத்தின் நன்மையால் மறுமை இன்பமுடையதாகும்
அதுவும்
இனநலத்தால் மேலும் சிறப்புடையதாகும் பாமரன் பொருள்
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல் குறள் # 460
நல்லஇனத்தைவிட சிறந்த துணையுமில்லை.தீய இனத்தைவிட
துன்பம் தரும்பகையும் இல்லை பாமரன் பொருள்
.
7 கருத்துகள்:
அனைத்து விளக்கமும் அருமை... 458 மிகவும் சிறப்பான குறள்...
திண்டுக்கல் தனபாலன் said...
//அனைத்து விளக்கமும் அருமை... 458 மிகவும் சிறப்பான குறள்.//
தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி.
இன நலம் பற்றி அருமையான குறட்பாக்களின் பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..!
தேர்ந்தெடுத்த குறள்கள் அருமை. விளக்கமும் இருப்பதால்தான் எனக்கு புரியுது:).
இராஜராஜேஸ்வரி said...
இன நலம் பற்றி அருமையான குறட்பாக்களின் பகிர்வுகள்.. பாராட்டுக்கள்.//
தங்கள் வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி.
asha bhosle athira said...
//தேர்ந்தெடுத்த குறள்கள் அருமை. விளக்கமும் இருப்பதால்தான் எனக்கு புரியுது:)//
.தங்களுடைய வருகைக்கு நன்றி. (சில குறள் களுக்கு பல அறிஞர்பெருமக்களின் பொருளுரைகளைப் படித்துதான் நானும் புரிந்து கொள்கிறேன்) நன்றி
உலகப் பொதுமறை இனம் என்று குறிப்பிட்டிருப்பது ஆச்சர்யம்...
நண்பர்களுடன் பேச வேண்டிய குரள்
www.malartharu.org
கருத்துரையிடுக
தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.