சனி, 5 அக்டோபர், 2013

அச்சமின்மை, ஈதல், அறிவுடைமை, ஊக்கமுடைமை நான்கும் தேவை ஆள்பவர்க்கு

பொருட்பால் அரசியல்
 இறைமாட்சி
குறள் 381 முதல் 385 வரை 


படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.     குறள் # 381
படை, மக்கள், செல்வம்,  நல்ஆலோசகர், நட்புநாடு, பாதுகாப்பு  ஆறும்
உடையவர் ஆட்சிசெய்பவர்களுள் சிறந்தவர்        பாமரன் பொருள்

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க்கு இயல்பு     குறள் # 382
அச்சமின்மை, ஈதல், அறிவுடைமை, ஊக்கம்உடைமை எனும் நான்கும்
எப்போதும் நீங்காமை ஆள்பவர்க்கு இயல்பானபண்பு       பாமரன் பொருள்

தூங்காமை கல்வி துணிவுஉடமை இம்மூன்றும்
நீங்கா நிலன்ஆள் பவர்க்கு     குறள் # 383
காலந்தாழ்த்தாமை கல்விதுணிவுடைமை ஆகியமூன்றும்
நீங்கக்கூடாது ஆட்சி நடத்துபவர்க்கு.          பாமரன் பொருள்

அறன்இழுக்காது அல்லவை நீக்கி மறன்இழுக்கா
மானம் உடையது அரசு    குறள் # 384
அறநெறிதவறாது தீயவை விலக்கி வீரம்குறையாது
மானத்துடன் நடப்பதே நல்ல ஆட்சி.      பாமரன் பொருள்

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு   குறள் # 385
வரும்வழிஉண்டாக்குதல் சேர்த்தல் காத்தல் பாதுகாத்தவற்றை
பிரித்துவழங்கல் ஆகியவை செய்யவல்லதே அரசு.    பாமரன் பொருள்

வியாழன், 3 அக்டோபர், 2013

எவ்வளவு சிறிதாயினும் நல்லதைக் கேளுங்கள் நிறைந்த பெருமை தரும்




.பொருட்பால், அரசியல்
அதிகாரம் ; கேள்வி
குறள் 416 முதல் 420 வரை

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்    குறள் # 416.
எவ்வளவு சிறிதாயினும் நல்லதைக் கேளுங்கள் அந்த அளவேயானாலும்
நிறைந்த பெருமை தரும்.             பாமரன் பொருள்

பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்து
ஈண்டிய கேள்வி யவர்.   குறள் 417.
தவறாக உணர்ந்தாலும் அறிவற்றசொல் சொல்லமாட்டார் ஆராய்ந்தறிந்து
நிரம்பிய கேள்வியறிவு உடையவர்.        பாமரன் பொருள்

கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.     குறள் # 418
ஓசையை காது கேட்டாலும் செவிட்டு தன்மையானதே கேள்வியறிவால்
துளைக்கப் படாத காது.                  பாமரன் பொருள்

நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது.     குறள் # 419.
நுண்ணிய கேள்விஅறிவு இல்லாதவர் பணிவான சொற்களைப்
பேசுபவராக ஆவது கடினம்.                    பாமரன் பொருள்

செவியின் சுவைஉணரா வாய்உணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்.    குறள் # 420
கேட்கும் சுவை உணராது வாயின் சுவை மட்டும் உணரும் மக்கள்
இறந்தாலும் வாழ்ந்தாலும் என்ன பயன்.            பாமரன் பொருள்

திங்கள், 30 செப்டம்பர், 2013

ஒழுக்கம் உடையவரின் வாய்ச்சொற்கள் ஊன்றுகோல் போல உதவும்.

பொருட்பால், அரசியல்
அதிகாரம் ; கேள்வி
குறள் 411 முதல் 415 வரை

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை.    குறள் # 411
செல்வங்களுள் செல்வம் கேள்விச்  செல்வமே, அச்செல்வம்
செல்வங்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது.    பாமரன் பொருள்

செவிக்குஉணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.     குறள் # 412.
செவிக்கு உணவு இல்லாத பொழுது சிறிது
வயிற்றுக்கும் உணவு தரப்படும்.       பாமரன் பொருள்

செவிஉணவின் கேள்வி உடையார் அவிஉணவின்
ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து.    குறள் # 413.
செவிஉணவாகிய கேள்வியை உடையவர்கள் வேள்வி உணவால் நிறைவடையும் தேவர்களுக்கு சமமாவர் உலகில்.   பாமரன் பொருள்

கற்றிலன் ஆயினும் கேட்க அஃதுஒருவற்கு
ஒற்கத்தின் ஊற்றுஆம் துணை.    குறள் # 414.
நூல்களைக் கற்காதவன் என்றாலும கேட்கவேண்டும் அது ஒருவருக்கு
தளர்ச்சியுற்ற காலத்தில ஊன்றுகோல் போல் துணையாகும். பாமரன் பொருள்   

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்.    குறள் # 415
வழுக்கும் தரையில் ஊன்றுகோல் போல உதவும்
ஒழுக்கம் உடையவரின் வாய்ச்சொற்கள்.                 பாமரன் பொருள்


.

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

கல்லாதவர்கள் எதற்கும் பயன்படாத களர் நிலம் போன்ற வர்கள்


 பால்; பொருட்பால்
அரசியல்
அதிகாரம் ; கல்லாமை
குறள் 406 முதல் 410 வரை.

உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்.            குறள் # 406
உயிரோடு உள்ளனர் என்ற அளவிலில்லாமல் ஒன்றுக்கும் பயன்படாத
களர்நிலத்தைப் போன்றவரே படிக்காதவர்.     பாமரன் பொருள்

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை அற்று.         குறள் # 407
நுட்பமான பெருமையுடைய நூல்களை ஆராயும் அறிவு இல்லாதவன் நல்லழகு
மண்ணால்சிறப்பாக செய்யப்பட்டபொம்மை போன்றதே.   பாமரன் பொருள்

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு.        குறள் # 408
நல்லவரிடம் உள்ள வறுமையைவிட கொடியதாகும்
கல்லாதவர்களிடம் உள்ள செல்வம்.        பாமரன் பொருள்

மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்துஇலர் பாடு.     குறள் # 409
மேல்குடியில் பிறந்தவரெனினும் கல்லாதவர் கீழ்க்குடியில்பிறந்தவரெனினும்
கற்றவரைப்போன்ற பெருமை இல்லாதவர்.      பாமரன் பொருள்

விலங்கோடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்.         குறள் # 410
மிருகங்களிலிருந்து மக்கள் வேறுபட்டவர் போல சிறந்தநூல்
கற்றவரிலிருந்து கல்லாதவர் வேறுபட்டவராவர்.    பாமரன் பொருள்

சனி, 14 செப்டம்பர், 2013

கல்வி கற்றதற்கு தகுந்தபடி நடக்க வேண்டும்


பொருட்பால்      
அரசியல்  அதிகாரம் – கல்வி
குறள் எண் 391 - 395
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.         குறள் # 391
கற்க பிழையில்லாது கற்கவேண்டியவை, கற்றபின்
நடக்கவேண்டும் கற்றதற்கு தகுந்தபடி.     பாமரன் பொருள்

எண்என்ப ஏனை எழுத்துஎன்ப இவ்விரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு.     குறள் # 382
எண்கள் மற்றும் எழுத்துக்கள் ஆகிய இரண்டும்
கண்கள் என்று சொல்வர் மக்களுக்கு.     பாமரன் பொருள்

கண்உடையர் என்பவர் கற்றோர் முகத்துஇரண்டு
புண்உடையர் கல்லா தவர்.     குறள் # 383
கண்ணுடையவர் என்பவர் கற்றோரே. முகத்தில்இரண்டு
புண்ணுடைவராவார் கல்வி கல்லாதவர்.    பாமரன் பொருள்

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.    குறள் # 384
மனம்மகிழ கூடிப்பழகுவதும் எப்போது சந்திப்போம் என பிரிவதும்
எல்லாமும் புலவர் செயல்.                 பாமரன் பொருள்      

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லா தவர்.        குறள் # 385
செல்வந்தர்முன் ஏழைபோல ஏக்கத்துடன் நின்று கற்றவர் உயர்ந்தவர்
இழிந்தவரே கல்லாதவர்கள்.                  பாமரன் பொருள்


திங்கள், 9 செப்டம்பர், 2013

விதியில்லையெனில் கஷ்டப்பட்டு காத்தாலும் தங்காது


குறள் பால்; அறத்துப்பால்  குறள் இயல் ஊழியல் அதிகாரம் - ஊழ் 

குறள் எண்  376 முதல் 380 வரை


பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.                       குறள் # 376
வருந்திக் காத்தாலும் தங்காது விதியில்லையெனில் நாமே
வெளியே எடுத்துப்போட்டாலும் போகாது நமதாயின்.    பாமரன் பொருள்

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.     குறள் # 377
ஊழால் விதித்த விதிப்படியில்லாமல் கோடிப் பொருள்களை
சேர்த்தவருக்கு அவற்றை அனுபவிப்பது கடினம்.     பாமரன் பொருள்

துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின்.      குறள் # 378
துறவு மேற்கொள்வர் நுகர் பொருளில்லாதவர் ஊழின்காரணமாய்
துன்பங்கள் கஷ்டப்படுத்தாமல் ஒழியுமென்றால்.,        பாமரன் பொருள்

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்.           குறள் # 379
நல்லதுநடக்கும்போது நல்லதாகப் பார்ப்பவர் தீயன நடந்தால்
கலங்கி துன்பப் படுவது ஏனோ?                     பாமரன் பொருள்

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.     குறள்  # 380
விதியைவிட மிக்க வலிமையானவை எவை உள்ளன மற்றொன்றை ஆராய்ந்தாலும் அதுவே முன்வந்து நிற்கும்.         பாமரன் பொருள்


சனி, 7 செப்டம்பர், 2013

வருவதற்குரிய ஊழால் உண்டாகும் சோர்வில்லா முயற்சி




குறள் பால்; அறத்துப்பால்  குறள் இயல் ஊழியல் அதிகாரம் - ஊழ் 

குறள் எண்  371 முதல் 375 வரை

ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி    குறள் # 371
வருவதற்குரிய ஊழால் உண்டாகும் சோர்வில்லா முயற்சி கைப்பொருள்
போவதற்கான விதியால் ஏற்படும் சோம்பல்.        பாமரன் பொருள்

பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை.         குறள் # 372
அறியாமையை உண்டாக்கும் இழப்பதற்கான ஊழ் அறிவைப் பெருக்கும்
ஆவதற்கான விதி இருந்தால்.    .        பாமரன் பொருள்

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்.      குறள் @ 373
நுட்பமான நூல்கள் பல கற்றாலும் விதியின்படி தன்னுடைய
இயல்பான அறிவே மேலோங்கும்    .        பாமரன் பொருள்

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.     குறள் # 374
இருவகைப்பட்டது உலகத்து இயல்பு செல்வம் உடையவராதல் வேறு
அறிவுடையராதல் வேறு.                .        பாமரன் பொருள்

நல்லவை எல்லாந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.     குறள் # 375
விதியினால் நல்லவை எல்லாம் தீயவை ஆதலும் தீயவை
நல்லவை ஆதலும் உண்டு பொருளீட்டும் முயற்சியில்  பாமரன் பொருள்



செவ்வாய், 3 செப்டம்பர், 2013

ஆசையில்லா நிலை போன்ற சிறந்த செல்வம் இப்பூமியில் இல்லை


குறள் பால்: அறத்துப்பால். 
குறள் இயல்: துறவறவியல். 
அதிகாரம்: அவாவறுத்தல்.

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து.       குறள் # 361
ஆசைஎன்பது எல்லா உயிர்களுக்கும் எப்பொழுதும்
தவறாமல் வரும் பிறப்பைத்தருகின்ற விதை       பாமரன் பொருள்

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.     குறள் # 362
வேண்டும்போது பிறவாமையை விரும்பவேண்டும் அது
ஆசையற்ற நிலையை வேண்டுகிறபோது வரும்.         பாமரன் பொருள்

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்பது இல்.          குறள் # 363
ஆசையில்லா நிலை போன்ற சிறந்த செல்வம் இப்பூமியில் இல்லை
வேறெங்கும்கூட அதற்கு நிகரானது இல்லை.          பாமரன் பொருள்


தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்.        குறள் # 364
தூய்மை என்பது ஆசையில்லாது இருப்பதே அத்தன்மை
மெய்ப்பொருளை வேண்டும்போது வரும்.           பாமரன் பொருள்

அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர்.        குறள் # 365
பற்றற்ற துறவிஎனப்படுவர் ஆசைகளை விட்டவரே மற்றவர்
மழுவதுமாக விட்டவர் இல்லை.                   பாமரன் பொருள்