பால்; பொருட்பால்
அரசியல்
அதிகாரம் ; கல்லாமை
குறள் 406 முதல் 410 வரை.
உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர். குறள் # 406
உயிரோடு உள்ளனர் என்ற அளவிலில்லாமல் ஒன்றுக்கும் பயன்படாத
களர்நிலத்தைப் போன்றவரே படிக்காதவர். பாமரன் பொருள்
நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை அற்று. குறள் # 407
நுட்பமான பெருமையுடைய நூல்களை ஆராயும்
அறிவு இல்லாதவன் நல்லழகு
மண்ணால்சிறப்பாக செய்யப்பட்டபொம்மை போன்றதே. பாமரன்
பொருள்
நல்லார்கண் பட்ட
வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட
திரு. குறள் # 408
நல்லவரிடம் உள்ள
வறுமையைவிட கொடியதாகும்
கல்லாதவர்களிடம் உள்ள
செல்வம். பாமரன்
பொருள்
மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்துஇலர் பாடு. குறள் # 409
மேல்குடியில் பிறந்தவரெனினும்
கல்லாதவர் கீழ்க்குடியில்பிறந்தவரெனினும்
கற்றவரைப்போன்ற பெருமை
இல்லாதவர். பாமரன்
பொருள்
விலங்கோடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர். குறள் # 410
மிருகங்களிலிருந்து மக்கள்
வேறுபட்டவர் போல சிறந்தநூல்
கற்றவரிலிருந்து கல்லாதவர் வேறுபட்டவராவர். பாமரன் பொருள்
5 கருத்துகள்:
கல்லாமை குறள் விளக்கம் அருமை.
அருமை
கோமதி அரசு said...
/கல்லாமை குறள் விளக்கம் அருமை//
தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி
Jaleela Kamal said...
//அருமை//
தங்கள் வருகைக்கும் தங்கள் கருத்தைப் பதிவு செய்தமைக்கும் நன்றி
திண்டுக்கல் தனபாலன் said...
//அருமை... தொடர வாழ்த்துக்கள்//.
தங்கள் வருகைக்கு நன்றி. வாழ்த்துக்களுக்கும் நன்றி
கருத்துரையிடுக
தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.