செவ்வாய், 18 மார்ச், 2014

உறவில்லாதவர் பற்றில்லாதவராதலால் பழிக்கு வெட்கப்படமாட்டார்.




திருக்குறள்
பொருட்பால்
அதிகாரம் : தெரிந்து தெளிதல்
குறள் 501 முதல் 510 வரை




அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்        குறள் # 501.
அறம், பொருள், இன்பம், உயிருக்கான அச்சம் எனும் நான்கினையும்
ஆராய்ந்து ஒருவனைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.        பாமரன் பொருள்

குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் கட்டே தெளிவு    குறள் # 502.
நற்குடும்பத்தில் பிறந்து குற்றமற்றவனாக பழிக்கு அஞ்சி
வெட்கப்படுபவனாக உள்ளவனைத் தேர்ந்தெடுக்கவும்.        பாமரன் பொருள்

அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.     குறள் # 503
அரியநூல்களைக் கற்று குற்றமற்றவராக உள்ளவரிடமும் ஆராய்ந்துபார்த்தால்
அறியாமை இல்லாமல் இராது.                           பாமரன் பொருள்    

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.   குறள் #504
குணத்தை ஆராய்ந்து, குற்றங்களையும் ஆராய்த்து அவற்றுள்.
அதிகமாக உள்ளதைக்கொண்டு அவனை எடைபோடுங்கள்.     பாமரன் பொருள்

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.      குறள் #505
ஒருவரது உயர்குணத்துக்கும் இழிகுணத்துக்கும் அவரவருடைய
செயல்களே உரை கல்.                 பாமரன் பொருள்

அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி.    குறள் # 506.
உறவு அற்றவரை தேர்வுசெய்வதைத் தவிர்ப்பீர் அவர் எவ்வித
பற்றில்லாதவராதலால் பழிக்கு வெட்கப்படமாட்டார்.        பாமரன் பொருள்

காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதமை எல்லாந் தரும்.   குறள் # 507.
அன்பின் காரணமாக அறியவேண்டியவை அறியாதவரைத் தேர்ந்தெடுப்பது
அறியாமை எல்லாம் தரும்.         பாமரன் பொருள்

தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்.   குறள் # 508.
ஒருவரை ஆராயாமல் தேர்வுசெய்தால் வருங்கால தலைமுறைக்கும்
நீங்காத துன்பத்தைத் தரும்.         பாமரன் பொருள்

தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்.  குறள் # 509
தேர்வுசெய்யாதீர் யாரையும் ஆராயாமல் தேர்ந்தெடுத்தபின்
அவரிடம் ஏற்கத்தக்கவற்றை நம்பவேண்டும்.      பாமரன் பொருள்

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்  குறள் # 510
ஆராயாமல் தேர்வுசெய்வதும் தேர்வு செய்தவனிடம் சந்தேகம் கொள்வதும்
நீங்காத துன்பத்தைத் தரும்            பாமரன் பொருள்


6 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை ஐயா... வாழ்த்துக்கள் பல... நன்றி...

ராஜி சொன்னது…

அருமையான குறள்களும், விளக்கங்களும். பகிர்வுக்கு நன்றி.

Unknown சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…
//அருமை ஐயா... வாழ்த்துக்கள் பல... நன்றி..//

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி

Unknown சொன்னது…

ராஜி சொன்னது…
//அருமையான குறள்களும், விளக்கங்களும். பகிர்வுக்கு நன்றி.//

தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

குணத்தை ஆராய்ந்து, குற்றங்களையும் ஆராய்த்து அவற்றுள்.
அதிகமாக உள்ளதைக்கொண்டு அவனை எடைபோடுங்கள்

அருமையான விளக்கங்கள் பாராட்டுக்கள்..

Unknown சொன்னது…

இராஜராஜேஸ்வரி சொன்னது…

//அருமையான விளக்கங்கள் பாராட்டுக்கள்.//
தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.