ஞாயிறு, 27 அக்டோபர், 2013

குற்றமே அழிவைத் தரும் பகை


பொருட்பால்  அரசியல்  
அதிகாரம் ; குற்றம் கடிதல்
 குறள் 431 முதல் 435 வரை

செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.  குறள் # 431
கர்வமும் கோபமும் இழிவான நடத்தையும் இல்லாதவர்களுடைய
மேன்மை மதிக்கத் தக்கது.              பாமரன் பொருள்

இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு,     குறள் # 432
பொருள் கொடாமையும் மாட்சியில்லாத மானமும் தீயவற்றில்
மகிழ்வதும் தலைவருக்கு கேடாகும். .              பாமரன் பொருள்

தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.    குறள் # 433
தினையளவே குற்றம் நேரினும் அதை பனையளவு பெரிதாகக்
கருதுவர் பழிபாவங்களுக்கு அஞ்சுபவர்            பாமரன் பொருள்

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் தரூஉம் பகை.   குறள் # 434.
குற்றம் வராமையை குறிக்கோளாகக் கொள்க, குற்றமே
அழிவைத் தரும் பகையாகும்.         பாமரன் பொருள்

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.    குறள் # 435
குற்றம் வரும் முன்பே வராமல் காத்துக் கொள்ளாதவன் வாழ்க்கை நெருப்புமுன் வைக்கப்படும் வைக்கோல் போல அழியும்.   . .         பாமரன் பொருள்

11 கருத்துகள்:

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

அருமையான குறள்களும் அற்புதமான விளங்களும்.

//குற்றம் வரும் முன்பே வராமல் காத்துக் கொள்ளாதவன் வாழ்க்கை நெருப்புமுன் வைக்கப்படும் வைக்கோல் போல அழியும். //

பாராட்டுக்கள் ஐயா.பகிர்வுக்கு நன்றிகள்.

/

இளமதி சொன்னது…

அருமையான குறள்களும் அதன் விளக்கமும்!

குற்றம் செய்தவன் வாழ்ஜையில் நிம்மதி கொள்வதென்பதேது...

குற்றத்தைச் செய்து குன்றுவதைவிட அதைச் செய்யாதிருப்பது மேன்மையல்லவா..

வாழ்த்துக்கள் ஐயா!

Unknown சொன்னது…

வை.கோபாலகிருஷ்ணன் said...
அருமையான குறள்களும் அற்புதமான விளங்களும்.

//குற்றம் வரும் முன்பே வராமல் காத்துக் கொள்ளாதவன் வாழ்க்கை நெருப்புமுன் வைக்கப்படும் வைக்கோல் போல அழியும். //

பாராட்டுக்கள் ஐயா.பகிர்வுக்கு நன்றிகள்.//

கருத்துப் பதிவிற்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி

Unknown சொன்னது…

இளமதி said...

//குற்றம் செய்தவன் வாழ்ஜையில் நிம்மதி கொள்வதென்பதேது...

குற்றத்தைச் செய்து குன்றுவதைவிட அதைச் செய்யாதிருப்பது மேன்மையல்லவா//

மிக அழகாக சொல்லிவிட்டீர்கள் அருமை. தங்கள் வருகைக்கம் கருத்துப் பதிவிற்கும் நன்றி

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

விளக்கம் மிகவும் அருமை ஐயா... வாழ்த்துக்கள்...

Unknown சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் said...
//விளக்கம் மிகவும் அருமை ஐயா... வாழ்த்துக்கள்.//

தங்கள் வருகைக்கும் கருத்தப் பதிவிற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி

இராஜராஜேஸ்வரி சொன்னது…

குற்றம் வரும் முன்பே வராமல் காத்துக் கொள்ளாதவன் வாழ்க்கை நெருப்புமுன் வைக்கப்படும் வைக்கோல் போல அழியும்.

அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

Unknown சொன்னது…

இராஜராஜேஸ்வரி said...
.
//அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்.//

தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி

முற்றும் அறிந்த அதிரா சொன்னது…

வழமைபோல பகிர்வும் கருத்தும் அருமை.

Unknown சொன்னது…

athira said...
வழமைபோல பகிர்வும் கருத்தும் அருமை.

தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி.

Tamil Bloggers சொன்னது…

தமிழ் தளங்கள் வைத்து இருப்பவர்கள் http://ad30days.in விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு,

தமிழ் அட்சென்ஸ் Ad30days.in ல் இணைந்து, உங்கள் தமிழ் தலத்தில் விளம்பரங்கள் காண்பிப்பதன் மூலம் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம். இப்பொழுதே சேருங்கள் http://publisher.ad30days.in/publishers_account.php . பதிவுசெய்து முற்றிலும் இலவசம் .

வாரம் ஒரு முறை உங்களின் வருமானத்தை நீங்கள் பெற்றுகொள்ளலாம்.

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.