வியாழன், 8 ஆகஸ்ட், 2013

நல்லறங்களை விரைந்து செய்ய வேண்டும்.









குறள் பால்: அறத்துப்பால். 
குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: நிலையாமை.
குறள் எண்கள் 331 முதல் 335 வரை

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.       குறள் # 331
நிலையில்லாதவற்றை நிலையானவை என்று உணர்கின்ற
அற்ப அறிவு இழிவானது.         பாமரன் பொருள்

கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.      குறள் # 332
நாடகஅரங்கிற்கு மக்கள் கூடுவது போன்றதே பெருஞ்செல்வம் சேர்வது
அதுபோவதும் கூட்டம் கலைவது போன்றதே..      பாமரன் பொருள்

அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.     குறள் # 333
நிலையில்லா இயல்பினது செல்வம் அத்தகுசெல்வம் கிடைத்தால்
நிலையான அறங்களைச் செய்க.        பாமரன் பொருள்

நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்.      குறள் # 334
நாள் என்பது ஒருகால அளவுபோல் காண்பித்தாலும்  உயிரை அறுக்கும்
வாள் அதுஎன உணர்ந்தவர்கள் அறிவர்.    பாமரன் பொருள்

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.    குறள் # 335
நாவைஅடக்கி விக்கல் (சாவு) வருவதற்குமுன் நல்லறங்களை
விரைந்து செய்ய வேண்டும்.        பாமரன் பொருள்


4 கருத்துகள்:

ராஜி சொன்னது…

அனைத்துமே இதுவரை படித்திராத குறள். தகுந்த விளக்கமுடன் அறிந்தேன். பகிர்வுக்கு நன்றி!!

Unknown சொன்னது…

ராஜி said...
//அனைத்துமே இதுவரை படித்திராத குறள். தகுந்த விளக்கமுடன் அறிந்தேன். பகிர்வுக்கு நன்றி!//

தங்களின் வருகைக்கும், தங்கள் கருத்தை பதிவு செய்தமைக்கும் நன்றி.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

நாடகஅரங்கிற்கு மக்கள் கூடுவது போன்றதே பெருஞ்செல்வம் சேர்வது

கொஞ்சம் கொஞ்சமாக சேரும் ...

அதுபோவதும் கூட்டம் கலைவது போன்றதே..

உடனடியாக வெளியேறிவிடும் ..!

Unknown சொன்னது…

இராஜராஜேஸ்வரி said..//செல்வம் சேர்வது

கொஞ்சம் கொஞ்சமாக சேரும் அதுபோவதும் கூட்டம் ..கலைவது போன்றதே.. உடனடியாக வெளியேறிவிடும் .//.
தங்கள் வருகைக்கும் அருமையான கருத்துப் பதிவிற்கும் நன்றி

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.