சனி, 31 ஆகஸ்ட், 2013

ஆசை இல்லாதவருக்கு துன்பம் இல்லாது போகும்




குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: அவாவறுத்த



அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா     குறள் # 366.
ஆசைக்கு அஞ்சிவாழ்வது அறம். ஒருவனை
வஞ்சித்துக் கெடுப்பது ஆசையே               பாமரன் பொருள்

அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டும் ஆற்றான் வரும்.   குறள் # 367
ஆசையினை மழுவதும் ஒழித்தால் கெடாமல் வாழ்வதற்குரிய செயல்
தான் விரும்பும் வழியில் உண்டாகும்.                பாமரன் பொருள்

அவாஇல்லார்க்கு இல்லாகும் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.   குறள் # 368
ஆசை இல்லாதவருக்கு துன்பம் இல்லாது போகும் ஆசைஇருந்தால்
துன்பங்கள் மேலும் மேலும் வரும்.                     பாமரன் பொருள்

இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்..        குறள் # 369
இன்பம் இடைவிடாமல் இவ்வுலகில் வரும் ஆசையென்னும்
துன்பங்களுள் பெருந்துன்பம் ஒழிந்தால்                     பாமரன் பொருள்

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்திலையே
பேரா இயற்கை தரும்.   குறள் # 370
நிறைவுபெறாத இயல்பிலான ஆசையை நீங்கினால் அந்தநிலையே
மாறா இயல்புடைய இன்பத்தைத் தரும்

4 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

ஆசை இல்லாதவருக்கு துன்பம் இல்லாது போகும்

நிறைவு தரும் பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

Unknown சொன்னது…

இராஜராஜேஸ்வரி said...
//நிறைவு தரும் பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!//

தங்கள் வருகைக்கும் கரொத்துப் பதிவிற்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி

முற்றும் அறிந்த அதிரா சொன்னது…

ஆசைதான் துன்பத்துக்கு காரணம்.. ஆனா மாத்தி யோசிக்கும் போது, ஆசையே இல்லாமல் போனால் மனிதர் உயிர் வாழ மாட்டோம்ம்..:).

Unknown சொன்னது…

athira said...
// ஆசையே இல்லாமல் போனால் மனிதர் உயிர் வாழ மாட்டோம்ம்..:).//

உண்மைதான் நியாயமான ஆசைகள் அளவோடு இருந்தால் பிரச்சினைகள் வராதே பேராசைகள் ..??
உங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.