திங்கள், 8 ஜூலை, 2013

அருட்செல்வமே செல்வங்களுள் சிறந்தது



               குறள் 241-246,


அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.    குறள் # 241
அருட்செல்வமே செல்வங்களுள் சிறந்தது, பொருட்செல்வம்
இழிந்த மனிதரிடமும் உண்டு.      பாமரன் பொருள்.


நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை.     குறள் # 242
நல்லவழியால் ஆராய்ந்து அருள்உடையவராகுக, பலவழிகளால்
ஆராய்ந்தாலும் அருளே நம்துணை.  பாமரன் பொருள்

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.      குறள் # 243
அருள்நிறைந்த மனம்உள்ளவர்க்கு இல்லை இருள்சூழ்ந்த
துன்ப உலகுக்குப் போவது.       பாமரன் பொருள்


மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.       குறள் # 244.
நிலைபெற்ற உயிர்களைக் காத்து அருளாளராக இருப்பவர்க்கு இல்லை தன்உயிர் பற்றிய பயம்.         பாமரன் பொருள்


அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லன்மா ஞாலங் கரி.           குறள் # 245.
துன்பம் அருளோடு வாழ்பவர்க்கு இல்லை, காற்று இயக்கும்
வளமிக்க உலகில்வாழ்வோரே சாட்சி.       பாமரன் பொருள்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.