சனி, 22 ஜூன், 2013

பயனில்லாதவை சொல்லுபவன் எல்லோராலும் இகழப் படுவான்.




பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.        குறள் @ 191
பலரும் வெறுக்கும்படி பயனில்லாதவை சொல்லுபவன்
எல்லோராலும் இகழப் படுவான்.        பாமரன் பொருள்

பயனில பல்லார்முன் சொல்லல் நயன்இல
நட்டார்கண் செய்தலிற் றீது.          குறள் # 192
பயனில்லாதவற்றை பலர்முன் சொல்லுதல், வெறுப்பவற்றை
நண்பர்களிடம் செய்தலைவிட தீமையானது.    பாமரன் பொருள்

நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித்து உரைக்கும் உரை.           குறள் # 193
நீதியற்றவன் என்பதைச் சொல்லும், பயனில்லாதவற்றை
விரிவாகப் பேசும் பேச்சு.       பாமரன் பொருள்

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து.       குறள் # 194
நீதியுடன் சேராமல் நன்மையிலிருந்து நீக்கும், பயனற்ற
பண்பற்ற சொற்களை பலரிடத்து சொல்லுதல்.     பாமரன் பொருள்

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்.      குறள் # 195
மேம்பாடு மதிப்போடு நீங்கிவிடும், பயனில்லாதவற்றை
நற்பண்பு உடையவர் சொன்னால்.       பாமரன் பொருள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.