திங்கள், 26 மார்ச், 2012

புகழ்வாய்ந்த வாழ்வு இல்லாதோர்க்கு நிமிர்ந்த நடை இல்லை


பெண்ணைவிட பெருமையானவை எவை கற்பெனும் மனஉறுதி உள்ளது எனில்.         பாமரன் பொருள்  
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மை உண்டாகப் பெறின்     குறள் -54

தெய்வம் தொழாவிடினும் கணவனை பெரிதும் மதிப்பவள்
வேண்டுவன வேண்டியபடி பெறுவாள்  --பாமரன் பொருள்    தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை             குறள் -55

தன்னைக் காத்து கணவனையும் காத்து பெருமைசேர்க்கும்
புகழைக்காப்பதில் உறுதியுள்ளவளே பெண் --பாமரன் பொருள்   தற்காத்து தற்கொண்டான்பேணித் தகைசான்ற
சொற்காத்து சோர்விளாள் பெண்           குறள் -56

சிறைபோன்ற காவல் என்ன செய்யும் பெண்கள்
மனஉறுதியால் காப்பதே சிறந்தது   பாமரன் பொருள்  சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்       நிறைகாக்கும் காப்பே தலை            குறள் -57

கணவன் (தேவைகளைப்) பெற்றால் பெறுஞ்சிறப்பு பெறுவர்         பெண்கள் வான்புகழ் கொண்டோர் உலகில்     பாமரன் பொருள்   
பெற்றான் பெறின் பெறுவர் பெண்டிர் பெறுஞ்சிறப்பு
புத்தேளிர் வாழும் உலகு           குறள் -58

புகழ்வாய்ந்த வாழ்வு இல்லாதோர்க்கு இல்லை பழிப்பவர் முன் தலை நிமிர்ந்த நடை          பாமரன் பொருள்  
புகழ்புரிந்த இல் இல்லோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை                    குறள் -59

மங்கலம் ஆகும் மனைவியின் நல்லொழுக்கம் மேலும்
அணிகலன் நல்ல குழந்தைகளே         பாமரன் பொருள்  
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கட்பேறு            குறள்-60




2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

குறள் மூலம் ஓங்குக நம் குரல். உமது பனி தொடரட்டும் வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

seenuguru said...
குறள் மூலம் ஓங்குக நம் குரல்

தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.